பாலஸ்தீன ஆதரவு நாள்… மஜக மாநில அணி செயலாளர்கள் பதாகை ஏந்தினர்…

ஏப்ரல்.05.,

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ‘அல்குத்ஸ் தினம்’ என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி இதனை ‘பாலஸ்தீன ஆதரவு நாள்’ என கடை பிடிக்கிறது.

இதனையொட்டி ‘இஸ்ரேலிய ஆக்ரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் ‘ என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார்.

இதை தொடர்ந்து மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மனித உரிமை அணி செயலாளர் அறந்தாங்கி முபாரக் ஆகியோர் பாலஸ்தீன ஆதரவு பதாகை ஏந்தினர்.

தொடர்ந்து மஜக-வின் அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

‘இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்:
சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் ‘

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
05.04.2024.