வேலூர்.செப்.07.,வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் கிளைகளை கட்டமைத்து மாவட்ட பொதுக்குழு நடத்துவது எனவும் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் இனபடுகொலையை கண்டித்து மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 11.09.2017 திங்கட்கிழமை நடத்துவது எனவும், அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், மாணவர் இந்தியா சார்பாக அடுத்த ஒரிரு நாட்களில் போரட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன், ரபிக் ரப்பானி (மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 07.09.17
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
நீட் தேர்வுக்கு எதிராக 9ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம்! மாணவர் இந்தியா பங்கேற்பு!
நீட் தேர்வுக்கு எதிராக,ஜனநாயக சக்திகள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் மாணவர் இந்தியா பங்கேற்று வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இவ்விஷயத்தில் தமிழக மக்களை தட்டி எழுப்ப வேண்டும் என்பதில் மாணவர் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் 09.09.2017 அன்று அதிமுக (அம்மா) அணியின் மாணவர் பிரிவு நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இந்தியா பங்கேற்கும் என்பததை தெரிவித்துக் கொள்கிறேன். இவண், முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா
மஜகவினர் சென்னை ஆலந்தூரில் ரயில் நிலையம் முற்றுகை…!
சென்னை.செப்.07., மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி வடக்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக நீட் தேர்வை எதிர்த்தும், சகோதரி அனிதா படுகொலையை கண்டித்தும் நேற்று (06.09.17) ஆலந்தூர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் தலைமை தாங்கினார். தமிழக உரிமைகளுக்கும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி #அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய பா.ஜ.க அரசையும் மாநில பினாமி பா.ஜ.க அரசையும் கண்டித்தும் மஜக மாநில செயலாளர் N.A.தைமிய்யா கண்டன உரையாற்றினார். மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர், மாவட்ட பொருளாளர் யாகூப், மாவட்டத் துணை செயலாளர் ஆலந்தூர் சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மெய்தீன், ஆலந்தூர் நகர செயலாளர் பாரூக் மரைக்காயர் உட்பட மாவட்டம், கிளை மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் என மனிதநேய சொந்தங்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #காஞ்சி_வடக்கு_மாவட்டம் 06.09.17
பண்ரூட்டியில் மஜக சார்பில் நீட் தேர்வை நீக்க கோரியும், அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்..
கடலூர்.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ரூட்டி நகரில் நீட் தேர்வை விலக்க கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில், நகர செயலாளர் யாசின் முன்னிலையிலும், மாவட்ட துணைச் செயலாளர் அஜீஸ் கான் வரவேற்புரை நிகழ்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நெய்வேலி ஷாஜஹான் அவர்களும், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கண்டன கோஷங்களை மாணவர் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ரியாஸ் தொடங்கி வைத்தார், மாவட்ட துணைச் செயலாளர் யூசுப், ஒன்றிய செயலாளர் ரஹிம் கான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கண்டனங்களை பதிவு செய்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம். 05.09.2017.
திருப்பூரில் இரயில் மறியல் மாணவர் இந்தியா அமைப்பினர் கைது..!
திருப்பூர்.செப்.05., மாணவர் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்டம் சார்பில் மருத்துவக் கல்லூரியில் சேர முழு தகுதியான மதிப்பெண்கள் இருந்தும், நீட் தேர்வு எனும் சதியால் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இறுதியில் உயிரிழந்த அரியலூர் மாவட்ட சகோதரி அனிதா அவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை இரத்து செய்யகோரியும், சமூக நீதி மண்ணாக விளங்கும் தமிழகத்தில், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை அழிக்க முயற்சிக்கும், மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், இன்று காலை 11.30 மணியளவில் அளவில் இரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பி.நெளஃபல் ரிஸ்வான் அவர்கள் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் கே.மதன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த உணர்வுமிக்க போரட்டத்திற்கு ஆதரவாக மஜக மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நேரம் 11.30 ஆனதும் குறித்த நேரத்தில் காதர்பேட்டை மார்கெட் பகுதியில் இருந்து திரண்ட மாணவ பட்டாளங்கள், இரயில் நிலையைத்தை நோக்கி முன்னேறினர். தடுப்புகள் அமைத்து தடுத்த போலிசார்களின் தடைகளை உடைத்து இரயில் நிலையம் புகுந்தனர். அதிகாரம் பலங்கொண்டு காவல்துறை அதிகாரிகள் மறிக்கவே, உணச்சிவசப்பட்ட மாணவர்கள் பிரதமர் மோடியின் உருவத்தை எரித்தும் கிழித்தும் எரிந்தனர். காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர். இந்த மறியல் போராட்டத்தில் மாநில உரிமையை பறிக்கும்