மஜக திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!

image

image

திண்டுக்கல்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்
A.ஹபிபுல்லா அவர்கள்
தலைமையில் நேற்று நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக
மாநில துணைச்செயலாளர்
திண்டுக்கல் M.அன்சாரி, கொள்கை விளக்க அணி
துணைச்செயலாளர்
C.A.சாந்து முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் A.அபி இரயில்வே, A.அப்துல் காதர் ஜெய்லானி, S.சரவணன், R.உமர் அலி, மருத்துவ அணி செயலாளர்
B. காதர் ஒலி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் R.M.குத்புதீன், தகவல் தொழில்நுட்ப அணி
மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா, வர்த்தக அணி பாபு (மாஸ்ட்டர்), நகர பொறுப்பு குழு நிர்வாகிகள், ஆட்டோ ஒட்டுநர் சங்க நிர்வாகிகள், வேடசந்தூர், வடமதுரை ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) எச் ராஜாவை -சாரணர் இயக்க தேர்தலில் தோற்க்கடித்த ஆசிரியர் பெருமக்களை பாராட்டுகிறோம், வெற்றி பெற்ற ஆசிரியர் மணி அவர்களை இக்கூட்டத்தின் சார்பாக பாராட்டுகின்றோம்.

2) மியான்மார் வாழ் மக்களுக்காக அனைத்து சமுக மக்களையும் பெரும் திரளாக திரட்டி மிகப் பெரிய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

3) பொதுக்கூட்டத்திற்க்கு கண்டன உரை ஆற்ற வருகைதரும் மூன்று MLA _க்களுக்கும் சிறப்பு வரவேற்பு
அளிப்பதெனவும், பிளக்ஸ், சுவர் விளம்பரங்கள் செய்வதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

4) காப்பீடு திட்டத்தில்
MRI – ஸ்கேன் எடுக்கப்படும் நிலையில் SBCC -யில் இரவு
8- மணிக்கு மேல் எடுக்க மாட்டோம் என்று மக்களுக்கு அலைக்கழிப்பான சூழல் உள்ளது, இதனை உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக முடிவு எடுக்கப்பட்டது.

5) கண்டன பொதுக்கூட்டத்திற்க்கு கூடுதலான முறையில் நிதி திரட்டுவதற்க்கு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக  திண்டுக்கல்
M.அன்சாரி அவர்கள் மற்றும்
A.ஹபிபுல்லா, A. அப்துல் காதர் ஜெய்லானி, S. சரவணன் B. காதர் ஒலி உள்ப்பட ஐவர் குழு தேர்வு செய்யப்பட்டது.

6) பேரறிவாளன் அவர்களின் பரோலினை இன்னும் ஒருமாத காலம் நீட்டிப்பு செய்து தருமாறு தமிழக அரசினை இக்கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்பஅணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்
20.09.17