புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்மார்க் கடையை அகற்ற கோரியும், இனி வரும் காலங்களில் பொன்பேத்தி கிராமத்திற்க்குல் டாஸ்மார்க் வைக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மஜக கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் ஆகியோருடன் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, சையது அபுதாஹீர், அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் ஜமின், நகர பொருளாளர் ஜகுபர் சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பாஷித் கான், மேற்கு மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன்,
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் வேலூர் மஜக அலுவலகம் வருகை…
வேலூர்.ஏப்.12., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்க்கு மாணவர் இந்தியா-வின் மாநில து.செயலாளர் அப்சர் சையத் வருகை புரிந்தார். மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் S.முஹம்மத் ஜாபர் முன்னிலையில், அமைப்பு குழு பொறுப்பாளர் முஹம்மத் வசீம் அவர்கள் சாலவை அணிவித்து வரவேற்றார். பின்பு மஜக நிர்வாகிகளிடம் மாணவர் இந்தியா-வின் சம்பந்தமாகவும் மாணவர்களுடைய எழுச்சி தொடர்பாக தீவிரமான ஆலோசனைகளை வழங்கினார். உடன் களப்போராளிகள் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 12.04.2017
திருச்சியில் மஜகசார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…
திருச்சி.ஏப்.10., திருச்சி மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அரியமங்கலத்தில் மஜக தண்ணீர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் அவர்கள் திறந்து வைத்தார். காஜாமலையில் மஜக மோர் பந்தலை பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். பிறகு தஞ்சை சாலையில் உள்ள மஹமுதியா பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்த இலவச மோர் விநியோகத்தை உற்சாகத்தோடு திறந்து வைத்தார் . முன்னதாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அஷ்ரப் அவர்களின் அலீஃப் கல்யாண பிரியாணி கடையை பொதுச் செயலாளர் திறந்து வைத்தார் . நிறைவாக பொதுச் செயலாளரும் , தலைமை ஒருங்கிணைப்பாளரும் திருச்சி அன்வாருல் உலூம் மதரசாவுக்கு வருகை தந்தனர் . அவர்களை நூருல்ஹக் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று உரையாடினார். உடன் துணை பொதுச் செயலாளர் ஈரோடு S.M.பாரூக், மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, பொருளாளர் அஷ்ரப் அலி, துணை செயலாளர்கள் ஷேக் தாவூத், ரபீக், ஜம் ஜம் பஷீர், காட்டூர் பஷீர், மாணவர் இந்தியா மைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தென்னூர் சதாம், தொழில் சங்கம் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அலி சேட், ஆழ்வார் தொப்புகிளை நிர்வாகிகள், அரியமங்கலம்
கல்லூரி விழாவில் மஜக & மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்பு..!
சென்னை.ஏப்.09., இன்று தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி சாதனையாளர்கள் நாள் விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்றனர், மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி பாஷா அவர்கள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் , மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா M.sc., மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் ஜாவித் ஜாபர் MBA ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இவ்விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மத் ஹாலித் மற்றும் காஞ்சி தென் சென்னை மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் கபீர், மெய்தீன் அவர்கள் தலைமையில் மாணவர் இந்தியா மாணவச் செல்வங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிறுவனர் மூசா ஹாஜியார் அவர்களும், கல்லூரி செயலாளர் காதர் ஷா அவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை. 09.04.2017.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் தொடர்முழக்க போராட்டம்…
திண்டுக்கல்.ஏப்.02., இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகில் கனிம வள ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்துவதை கண்டித்தும் தொடர் முழக்க போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் போகம்பூர் திப்பு திடலில் காலை 11மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜகவின் மாநில துணை செயலாளர் திண்டுக்கல். M.அன்சாரி, கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி .சாந்து முகம்மது, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் A.ஹபிபுல்லா(இரயில்வே), உமர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் T.முகமது பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர் T.மரிய மனோஜ் ஆகியோர் தலைமையில் மாணவர் இந்தியா நகர செயலாளர் M.தினேஷ் சக்திபாலன், நகர துணை செயலாளர் M.முனாப் தீன், நகர பொருளாளர் S.உமர் முக்தார் ஆகியோர் முன்னிலைவகித்தனர், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் A.முகமது நவ்ஃபல் வரவேற்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், சமுக ஆர்வளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மத்திய அரசை கண்டித்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1. தமிழகத்தில் அமல்படுத்த