திருச்சியில் மஜகசார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

image

image

image

திருச்சி.ஏப்.10., திருச்சி மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அரியமங்கலத்தில் மஜக தண்ணீர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் அவர்கள் திறந்து வைத்தார். காஜாமலையில் மஜக மோர் பந்தலை பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். பிறகு தஞ்சை சாலையில் உள்ள மஹமுதியா பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்த இலவச மோர் விநியோகத்தை உற்சாகத்தோடு திறந்து வைத்தார் .

முன்னதாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அஷ்ரப் அவர்களின் அலீஃப் கல்யாண பிரியாணி கடையை பொதுச் செயலாளர் திறந்து வைத்தார் .

நிறைவாக பொதுச் செயலாளரும் , தலைமை ஒருங்கிணைப்பாளரும் திருச்சி அன்வாருல் உலூம் மதரசாவுக்கு வருகை தந்தனர் . அவர்களை நூருல்ஹக் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று உரையாடினார்.

உடன் துணை பொதுச் செயலாளர் ஈரோடு S.M.பாரூக், மாவட்ட செயலாளர்  இப்ராம்ஷா, பொருளாளர் அஷ்ரப் அலி, துணை செயலாளர்கள் ஷேக் தாவூத், ரபீக், ஜம் ஜம் பஷீர், காட்டூர் பஷீர், மாணவர் இந்தியா
மைதீன் அப்துல் காதர்,
இளைஞர் அணி தென்னூர் சதாம், தொழில் சங்கம் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அலி சேட், ஆழ்வார் தொப்புகிளை
நிர்வாகிகள், அரியமங்கலம் கிளைநிர்வாகிகள்,
காட்டூர் கிளை நிர்வாகிகள், நத்தர்ஷா தர்கா கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திருச்சி மாவட்டம்.
10.04.2017