தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!

image

image

image

தஞ்சை.ஏப்.10., தஞ்சாவூரில் தொடர்ந்து 14 நாட்களாக தோழர் மணியரசு தலைமையில் காவிரி மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் உமா பாரதி கொண்டு வந்திருக்கும் ஒற்றை தீர்ப்பாய சட்டத்தை எதிர்த்தும் நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகள் எழுச்சியோடு பங்கேற்று வருகிறார்கள் .

இன்று மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை ஆதரித்து எழுச்சியுரையாற்றினார் .

அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

கடந்த இரண்டு வாரங்களாக இப்போராட்டத்தில் தஞ்சை நகர மஜகவினர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது .

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தஞ்சை தெற்கு மாவட்டம்.
10.04.2017