காயல்பட்டினத்தில் மதுக்கடையை அனுமதிக்க கூடாது மாவட்ட ஆட்சியரிடம் மஜக மனு…

image

தூத்துக்குடி,ஏப்.10., காயல்பட்டிணம் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பிரதான சாலையான காயல்பட்ட்டணம் புற வழிச்சாலையில் மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின்  மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் காயல் நகர செயலாளர் ஜிபுரி, பொருளாலர் மீரான், மாவட்ட பொருளாலர் நவாஸ், மாவட்ட துணை செயளாலர் நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K.ராஸிக் முஸம்மில், நகர துனை செயலாளர் மொகுதும் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்.
10.04.2017