இன்றைய நாகரீக வளர்ச்சியில் ... எல்லாவற்றையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தோன்றினாலும்.. மனிதர்களின் வேலைகளை இலகுவாக்க எண்ணற்ற உபகரணங்கள் வந்தாலும்.. நாம் உண்ணும் உணவு பொருளை விளைவிக்க விவசாயிகளால் மட்டுமே முடியும்.. இதில் லாபம் பெரிதாக இல்லையென்றாலும் மண் வளத்தை பக்குவப்படுத்தி மக்கள் நலமுடன் வாழ தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தி ஊழியம் செய்யும் ஒப்பற்ற ஜீவன்களான விவசாயிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாயிகள் அணி பிரிவு.! தோழர்களே... ''இந்தியா ஒரு விவசாய நாடு’' என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை மட்டுமல்ல விவசாய பெருமக்களையும் வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டு உள்ளன.! டெல்லியில் தொடர்ச்சியான விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் போராடிய விவசாயிகள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து போராட்டத்தை முடக்கிய மோடி தலைமையிலான பாஜக அரசு! அம்பானி அதானிக்கு சேவகம் செய்வதில் தனதுவிசுவாசத்தை காட்டுகிறது.! நினைத்தாலே வேதனை மிஞ்சுகிறது. உண்ண உணவு கொடுக்கும் விவசாயி உணவில்லாமல் எலிக்கறி தின்று மரணிக்கும் அவலம், இன்றும் தொடர்கிறது. பொதுவாக விவசாயத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு போதிய அளவில் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’
நாகப்பட்டிணம்
மீனவ பெண்கள் நடத்தும் “சினேகா” நிறுவன நிகழ்ச்சியில்… நாகை MLA பங்கேற்பு!
நாகை.டிச.21., நாகப்பட்டினம் தொகுதியில் இன்று "சினேகா" என்ற தொண்டு நிறுவனத்தின் சமூக விழாவில் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இந்த அமைப்பு நாகை, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கு மத்தியில் பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு வாழ்நிலை, அரசு திட்டங்களை பெற்றுக் கொடுத்தல் என பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது. இன்று நாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற M .தமிமுன் அன்சாரி MLA அவர்கள், "சினேகா" தொண்டு நிறுவனத்தில் பணிகளை பாராட்டி பேசினார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 21.12.17
மஜக நாகை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்..!
நாகை. டிச.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் ,மாவட்ட பொருளாளர் பரக்கத்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ் , மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர் மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜீஸ் , சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் , ஜலாலுதீன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சபுர்தீன், முஜீபுர் ரஹ்மான், நகர செயலாளர்கள் சாகுல் ஹமீது ,இஸ்மாயில், நகர பொருளாளர்கள் அஜீ ஜுர் ரஹ்மான் , இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். தீர்மானம்: வருகின்ற பிப்ரவரி 28 கட்சியின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், அதில் தலைமை நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களை அழைப்பது என்றும் திர்மானம் நிறைவேற்றபட்டது. இறுதியில் மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி நன்றி கூறினார் தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 18.12.17
எலந்தங்குடியில் திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்.! முற்போக்கு முயற்சி என மஜக பொதுசெயலாளர் நேரில் வாழ்த்து..!!
நாகை.டிச.18., நாகை வடக்கு மாவட்டம், எலந்தங்குடியில் சமூக ஆர்வலர் S.ஹாஜா மைதீன் அவர்களின் திருமண நிகழ்வு நேற்று (17.12.2017) நடைப்பெற்றது. திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமும் நடைப்பெற்றது.இந்த முகாமில் பல்வேறு மதத்தினர்களும் வருகை தந்து இரத்த தானம் செய்தனர். மணமக்களை வாழ்த்த மஜக பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து வாழ்த்தி விட்டு திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தற்காக பாராட்டுக்களையும் கூறினார்.இது முற்போக்கு முயற்சி என கூறி வாழ்த்தினார். தினேஷ் என்ற இரத்த தான கொடையாளிக்கு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். அவ்வூரை சார்ந்த ஜாமத்தினர்களும், பிரமுகர்களும் பொதுசெயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அவ்வூரை சார்ந்த ஏராளமானோர்கள் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். எலந்தங்குடியை தொடர்ந்து புறப்பட்டு நீடுர் எஸ்கோயர் சாதிக் இல்ல திருமண விழாவில் பங்கேற்க திருவிட்டச்சேரி புறப்பட்டு சென்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது, அபுசாலிஹ், ஜமில் , சமூக ஆர்வலர் இர்பான் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடனியிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
புதிய வீரியத்துடன்..! திருப்பூண்டி மஜக..!!
நாகை. டிச.18., திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கிளை சார்பாக இன்று புதிய கிளை அலுவலகம் திறப்பு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் திருப்பூண்டி கிளைக்கு வருகை தந்து மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஜக கொடிகம்பங்களில் கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து திருப்பூண்டி கிளையின் சார்பாக பிரம்மாண்ட கிளை அலுவலகத்தையும் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர், மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜிஸ், சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூண்டி கிளை செயலாளர் அஸ்ரப் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை