தஞ்சை.ஏப்.03., இன்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருபுவனம் விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் ஏராளமான மஜகவினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம் 03.04.17
Author: admin
நாகையில் மறியல் போர்! விவசாயிகளுடன் தமிமுன் அன்சாரி MLA கைது!
நாகை. ஏப்.03., டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று நாகப்பட்டிணத்தில் விவசாய சங்கங்ளின் கூட்டு இயக்கம் சார்பில் தோழர். தனபாலன் தலைமையில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் தொகுதி MLA M. தமிமுன் அன்சாரி கலந்துக்கொண்டார். முதலில் புத்தூர் அருகில், எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பிறகு நாகை திருவாரூர் சாலையில் அரை மணி நேரம் மறியல் நடைப்பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். பிறகு தமிமுன் அன்சாரி MLA , தோழர். தனபாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இவண், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03_04_17
பாதிப்படைந்த பாலத்தை நாகை MLA நேரில் பார்வையிட்டார்!
நாகை. ஏப்.03., நாகப்பட்டினத்தில் ரயில்வே மேம்பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2008-ல் கட்டப்பட்டு 2013-ல் திறக்கப்பட்ட இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டார். இன்று காலை (03-04-2017) நேரில் அதிகாரிகள், பொறியியல் வல்லுனர்களுடன் பாலத்தை MLA அவர்கள் பார்வையிட்டார். ஒரு மாதத்தில் பாலம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்து தொடங்கும் என்று MLA தெரிவித்தார். இதுகுறித்து மேலதிகாரிகளுடன் பேசியிருப்பதாகவும் கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03-04-2017.
நாகை நகரில் தொகுதி மக்களை சந்தித்து MLA குறைக் கேட்பு…
நாகை.ஏப்.03., நாகப்பட்டினத்தில் நேற்று 02-04-17 சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நகரின் முக்கிய வீதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கடைத்தெரு,ஆசாத் மார்க்கட், நூல்கடைத்தெரு, யாஹுசைன் பள்ளித்தெரு, நீலா கீழ வீதி,புத்தூர் ரவுண்டானா,ஆகிய நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று தொகுதி மக்களிடம் நேரில் கலந்துரையாடினார். வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்,சிறுகடை வியாபாரிகள், பாதசாரிகள்,ஷாப்பிங் வந்த பொதுமக்ககள், தொழிலாளர்கள் என பலரையும் சந்தித்து பேசினார். அவர்கள் சுட்டிக்காட்டிய விசயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் MLA அவர்கள் கூறினார்கள். MLA அவர்களை நாகை நகர மக்கள் ஆவலுடன் வரவேற்று,கை குலுக்கி உரையாடியது குறிப்பிடத்தக்கது. இவண், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 02_04_17
எழுச்சியோடு நடைபெற்ற கோவை மஜக கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…
கோவை.ஏப்:02., கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR. பதுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக் அவர்கள் மஜக கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி உரையாற்றி மக்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், பகுதி பொருளாளர் ஹாருண் ரஷீது, துணைசெயலாளர் அக்பர்அலி மற்றும் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு. * கிணத்துக்கடவு பகுதி முழுவதும் கொடியேற்றுவிழா நடத்துவது. * பகுதியின் சார்பாக சுந்தராபுரத்தில் மாநில நிர்வாகிகளை அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது. * கிளைகளை அதிகப்படுத்துவது. * மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது!!! தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 02.04.17