பாதிப்படைந்த பாலத்தை நாகை MLA நேரில் பார்வையிட்டார்!

image

image

நாகை. ஏப்.03., நாகப்பட்டினத்தில் ரயில்வே மேம்பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2008-ல் கட்டப்பட்டு 2013-ல் திறக்கப்பட்ட இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டார்.

இன்று காலை (03-04-2017) நேரில் அதிகாரிகள், பொறியியல் வல்லுனர்களுடன் பாலத்தை MLA அவர்கள் பார்வையிட்டார்.

ஒரு மாதத்தில் பாலம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்து தொடங்கும் என்று MLA தெரிவித்தார்.

இதுகுறித்து மேலதிகாரிகளுடன் பேசியிருப்பதாகவும் கூறினார்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
03-04-2017.