(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை) தெற்கு ரயில்வே துறை, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 25 விரைவு ரயில்களுக்கு இருந்து வரும் பிரிமியம் தட்கல் முன்பதிவு முறையை மேலும் 100 விரைவு ரயில்களுக்கு விரிவுபடுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை முன் அறிவிப்பு இல்லாமல் அமல்படுத்தி இருப்பது தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தட்கலுக்கு ஒதுக்கப்பட்ட 30 விழுக்காடு இருக்கையில் இருந்து பிரிமியமுக்கு 15 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. படிப்படியாக ஏற்கெனவே 25 ரயில்களுக்கு பிரிமியம் விரிவு படுத்தப்பட்டிருந்தது. இந்த தட்கல் சிஸ்டம் முறையில் சொற்ப வசதி படைத்தவர்கள் பயனடைந்து வந்தனர். அதில் 15 விழுக்காடு இருக்கைகள் இப்போது அவர்களுக்கும் எட்டாக் கனியாகி விட்டது. தட்கல் முறையில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பிரிமியம் தட்கலில் சாதா வகுப்பு கட்டணத்தை காட்டிலும் 3 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தட்கலில் போகும் வசதி கொண்டவர்களில் பாதி பேர் பயண வாய்ப்பை இழக்கின்றனர். ரயில்வே துறையானது மக்களின் தேவைக்கேற்ப தடங்களின் எண்ணிக்கையையும் ரயில்களின்
Author: admin
மாட்டு அரசியல் தூத்துக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… மஜக பங்கேற்பு.
தூத்துக்குடி.ஜூன்.06., இன்று 06:06:2017 காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் VVD சிக்னல் அருகில் திமுக , கம்யூனிஸ்ட் வலது, கம்யூனிஸ்ட் இடது, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஆதிதமிழர் பேரவை, மமக, மமமுக, தாமக, இ.யூ.முஸ்லீம் லீக், ஆதிதமிழர் கட்சி ஆகிய அனைத்து கட்சிகள் இணைந்து மாட்டு அரசியலில் ஈடுபடும் மத்திய மதவாத அரசைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமதி கீதா ஜீவன் MLA அவர்கள் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாஹீர்உசேன் கண்டன உரையாற்றினார். ஒருங்கிணைப்பை ஏற்ப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் அவர்களுக்கு மஜகவின் மாவட்ட செயலாளர் நன்றிதனைதெறிவித்தார். இந்நிகழ்வில் மஜகவின் தூத்துக்குடி, ஆத்தூர், உடன்குடி நிர்வாகிகளும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோழமை அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. தூத்துக்குடி மாவட்டம். #MJK_IT_WING 06.06.2017
நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்களுக்கு வினியோகிப்போம்!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதல பதிவு) புனித ரமலான் மாதம் இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் அற்புதமான மாதமாகும். திருக்குர்ஆன் உலக மக்களுக்கு அருளப்பட்ட மாதம் என்பதால் இது கூடுதல் சிறப்பை பெறுகிறது. உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் இறையச்ச உணர்வோடு நோன்பிருந்து, நல்ல காரியங்களை நாள்தோறும் நிறைவேற்றி, பாவங்களிலிருந்து மீளும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். நமது நாட்டில் ரமலான் மாதத்தையும், நோன்பையும் இந்து , கிறித்தவ சகோதரர்களும் மிகுந்த மரியாதையோடு உற்று நோக்குகிறார்கள். தங்களின் நட்பை வெளிப்படுத்தும் வகையில், அவர்களில் சிலர் ஒரு நாள் நோன்பிருந்து ஒரு புதிய அனுபவத்தை பெற்று மகிழ்கிறார்கள். முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளில் வாழும், முஸ்லிம் அல்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது இடங்களில் ரமலான் மாதத்தில் எதையும் சாப்பிட அனுமதிப்பதில்லை. இது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, நமது பாரம்பரிய உறவுகளின் உச்சமாகும். இத்தகைய சூழலில், சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு ரமலான் மாதத்தில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புனித ரமலானில் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் . இந்நிலையில் அன்பையும் , உறவையும் வலுப்படுத்தும் வகையில் , நோன்பு
இரா. செழியன் மரணம் .! மஜக இரங்கல் .!
அறிஞர் அண்ணாவின் அன்புக்குரியவரும் , நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களின் தம்பியுமான இரா. செழியன் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது . மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என வட இந்திய தலைவர்களால் போற்றப்பட்டவர் . நாடாளுமன்ற சட்ட நுட்பங்களை பலரும் இவரிடம் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்வார்கள் . அவர் நாடாளுமன்றத்திலும் , சட்டமன்றத்திலும் எழுப்பிய விவாதங்களும் , கேள்விகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன . தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகவும் , பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் அறிஞராகவும் திகழ்ந்தார் . அவரை இழந்துவாடும் ஆதரவாளர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06.06.2017
மாட்டிறைச்சி விவகாரம் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அறந்தாங்கியில் அணைத்து கட்சி யினர் கண்டன ஆர்ப்பாட்டம்…மஜக பங்கேற்பு…
புதுகை.ஜூன்.06., மாவட்ட செயலாளர் முபாரக் அலி உரை உரை நிகழ்த்தினார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மக்களை திரட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடும்-என பேசினார், ஆர்பாட்டத்தில் மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி மாவட்ட மாவட்ட பொருளாளர் அரசை சேக் இஸ்மாயில் மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி மாவட்ட துணைச் செயலாளர் அரசநகரி சையது அபுதாஹிர். மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்பாஸ். மாவட்ட தொழில் நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன் அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் உள்ளிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர் தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி , மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் #MJK_IT_WING 06.05.2017