இரா. செழியன் மரணம் .! மஜக இரங்கல் .!

அறிஞர் அண்ணாவின் அன்புக்குரியவரும் , நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களின் தம்பியுமான இரா. செழியன் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது .

மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என வட இந்திய தலைவர்களால் போற்றப்பட்டவர் . நாடாளுமன்ற சட்ட நுட்பங்களை பலரும் இவரிடம் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்வார்கள் .

அவர் நாடாளுமன்றத்திலும் , சட்டமன்றத்திலும் எழுப்பிய விவாதங்களும் , கேள்விகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன .

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகவும் , பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் அறிஞராகவும் திகழ்ந்தார் .

அவரை இழந்துவாடும் ஆதரவாளர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.06.2017