வேலூர்.டிச.17.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஆம்பூர் நகர 17வது வார்டு கிளையின் ஆலோசனை கூட்டம் அக்மல் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் M.ஜஹிருஸ் ஜமா, T.R.முன்னா(எ) நஸிர் அவர்களும் கொண்டார்கள். இக் கூட்டத்தில் ஆம்பூர் நகர 17வது வார்டு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதிய கிளை உதயமானது. 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். இந் நிகழ்வில் நகர பொருளாளர் அனீஸ் அஹ்மத்,நகர துணைச் செயலாளர்கள் அமிர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ரபத்துல்லா இம்ரான் அஹம்த், ஷாயின்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம் 17.12.2017.
Author: admin
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறைத்துறை டிஜிபி அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!
சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சிறைத்துறை டிஜிபி அவர்களை மஜக மாநில செயலாளர் தைமியா, மாநில துணைசெயலாளர்கள் அப்துல்பஷீர், ஷமீம் அகமது, மற்றும் சகோதரர் காதர் ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள். முன்னதாக சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக இன்று காலை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 18.12.17
எலந்தங்குடியில் திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்.! முற்போக்கு முயற்சி என மஜக பொதுசெயலாளர் நேரில் வாழ்த்து..!!
நாகை.டிச.18., நாகை வடக்கு மாவட்டம், எலந்தங்குடியில் சமூக ஆர்வலர் S.ஹாஜா மைதீன் அவர்களின் திருமண நிகழ்வு நேற்று (17.12.2017) நடைப்பெற்றது. திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமும் நடைப்பெற்றது.இந்த முகாமில் பல்வேறு மதத்தினர்களும் வருகை தந்து இரத்த தானம் செய்தனர். மணமக்களை வாழ்த்த மஜக பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து வாழ்த்தி விட்டு திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தற்காக பாராட்டுக்களையும் கூறினார்.இது முற்போக்கு முயற்சி என கூறி வாழ்த்தினார். தினேஷ் என்ற இரத்த தான கொடையாளிக்கு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். அவ்வூரை சார்ந்த ஜாமத்தினர்களும், பிரமுகர்களும் பொதுசெயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அவ்வூரை சார்ந்த ஏராளமானோர்கள் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். எலந்தங்குடியை தொடர்ந்து புறப்பட்டு நீடுர் எஸ்கோயர் சாதிக் இல்ல திருமண விழாவில் பங்கேற்க திருவிட்டச்சேரி புறப்பட்டு சென்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது, அபுசாலிஹ், ஜமில் , சமூக ஆர்வலர் இர்பான் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடனியிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சரை சந்தித்த மஜக நிர்வாகிகள்!!
சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களை மஜக மாநில துணைசெயலாளர்கள் அப்துல்பஷீர், ஷமீம்அகமது ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள். அதை தொடர்ந்து இன்று மாலை சிறைத்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 18.12.17
புதிய வீரியத்துடன்..! திருப்பூண்டி மஜக..!!
நாகை. டிச.18., திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கிளை சார்பாக இன்று புதிய கிளை அலுவலகம் திறப்பு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் திருப்பூண்டி கிளைக்கு வருகை தந்து மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஜக கொடிகம்பங்களில் கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து திருப்பூண்டி கிளையின் சார்பாக பிரம்மாண்ட கிளை அலுவலகத்தையும் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர், மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜிஸ், சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூண்டி கிளை செயலாளர் அஸ்ரப் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை