எள்ளேரியில் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! தைமிய்யா பங்கேற்பு..!


கடலூர்.பிப்.03..,

மதரீதியாக, இன ரீதியாக, இந்தியாவை பிரிக்கும் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக கடலூர் மாவட்டம் லால்பேட்டையை அடுத்து உள்ள எள்ளெரியில் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் ஊராட்சி மன்ற துணை தலைவர் A.M.K.ஹம்ஜா தலைமையில் நேற்று (02-02-2020) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் O.R.ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கியாசுதீன், முஹம்மது ரியாஸ், மாணவர் இந்தியா முஸரப், லால்பேட்டை நகரச் செயலாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்பம்_அணி
#MJK_IT_WING
#கடலூர்_மாவட்டம்
02-02-2020