மதுரை.ஆக.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று 24.08.17 நடைப்பெற்றது. மஜக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் P.M.சேக் அகமது அப்துல்லா அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, பகுதி செயலாளர் உடன் ஆலோசனைகள் நடைபெற்று ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் புதூர் சாலி, துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜமாலுதீன், இம்தியாஸ், நாகூர் அனிபா, k.ஷாஜஹான், இளைஞர் அணி செயலாளர் M.அலாவுதீன், விவசாய அணி செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் சுலைமான், மேலூர் ஒன்றிய செயலாளர் சின்னமீரான், இளைஞர் அணி பொருளாளர் அப்பாஸ், கிளை செயலாளர் சோலை ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 16.09.2016 அன்று மாநில செயற்குழு மதுரையில் நடைபெற இருக்கிறது, அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மஜக கொடி, பிளக்ஸ் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பு சிறப்பாக ஏற்பாடுகள் செய்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது. தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மதுரை வடக்கு மாவட்டம். 24.08.2017.
Author: admin
பேரறிவாளனுக்கு பரோல்..! தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை...) 26 ஆண்டுகாலமாக வெஞ்சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு இன்று பரோல் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.பேரறிவாளனின் அன்புத் தாய் அற்புதம்மாளின் கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞகர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தொடர்ந்து பேசி வந்தோம். மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களிடமும், அதனை தொடர்ந்து இன்றைய மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும் நாங்கள் வலியுறுத்தினோம். இவ்விசயத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு.C.V.சண்முகம் அவர்கள் நாங்கள் எடுத்துவைத்த வாதங்களையும், நியாயங்களையும் புரிந்துகொண்டு செயல்பட்டார். இன்று நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் அவர்களுக்கும் முதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இம்முயற்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டசபையில் ஒருமித்து ஆதரவளித்த அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும், இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும்,
சிறுபான்மையினர் நலம் மற்றும் பல்வேறு திட்டபணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு விழிப்புணர்வு கூட்டத்தில் மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!
வேலூர்.ஆக.24., சிறுபான்மையினர் நலம் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு விழிப்புணர்வு கூட்டத்தில் மதவழி சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள்,கிறித்தவர்கள், புத்த மதத்தினர், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஜெயின், ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களில் மீதான ஆய்வு கூட்டம் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டமானது நேற்று 23.08.2017 பிற்பகல் 2.30 மணி அளவில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேலூர் (கி) மாவட்ட அமைப்புக் குழு பொறுப்பாளர் M.ஜாகிர் உசேன் கலந்து கொண்டார். வேலூர் மாநகர கொணவட்டம் மதினா நகர் பகுதியில் தெரு விளக்கு அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் (கி)மாவட்டம். 24.08.17
மஜக காஞ்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!!
காஞ்சி.ஆக24., நேற்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் பகுதியில் மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில செயலாளர் N.A.தைமிய்யா M.sc அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சத்தார், MJTS மாவட்ட செயலாளர் ரபீக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம். 23.08.17
காவல்துறையின் மெத்தனபோக்கை கண்டித்து சாலைமரியல்..!! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!!!
திருவண்ணாமலை.ஆக.23., திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் மற்றும் மேல்புழிதியூதிர் கிராமத்தில் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் கொடுரமான முறையில் கொள்ள படுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காவல் துறையினர் மேத்தன போக்கினை கண்டித்து மாபெரும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாய கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து திரளாக கொண்ட்டார்கள். குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மஜக சார்பாக கோரிக்கை விடுத்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ட_அணி #MJK_IT_WING திருவண்ணாமலை மாவட்டம். 23.08.2017.