குவைத்.ஜுன். 02., #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் மார்க்க பிரிவு #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) யின் #இப்தார்_நிகழ்ச்சி கடந்த 31-05-2018 வியாழன் அன்று 4:30 மணியளவில் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் IKP-யின் மண்டல செயலாளர் சீனி முஹம்மத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக ரஷாதி அவர்கள் கிராத் ஓதி துவங்கினார். IKP-யின் துணை செயலாளர் நீடுர் சர்புதீன் வரவேற்பு நிகழ்த்த. பிறகு மஜக மண்டல செயலாளர் முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க. பின்பு தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #SS_ஹாரூன்_ரசீது மற்றும் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மௌலவி #JS_ரிஃபாய்_ரஷாதி அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர். பின்பு TVS குழுமம் சேர்மேன் #ஹைதர்_அலி அவர்கள் உரை நிகழ்த்த. இறுதியில் கங்கை கோபால் அவர்கள் நன்றியுறை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். #மனிதநேய_கலாச்சார_பேரவை. #மனிதநேய_ஜனநாயக_கட்சி. #MJK_IT_WING. #MKP_குவைத்_மண்டலம். 55278478-60338005-65510446.
Month:
மஜக கோவை மாவட்டம் செல்வபுரம் வடக்கு கிளைகளின் சார்பில் மாபெரும் ஸஹர் விருந்து நிகழ்ச்சி..! மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!
கோவை.ஜுன்.02. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்தியபகுதி செல்வபுரம் வடக்கு 77 மற்றும் 78வது வார்டு சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு மாபெரும் ஸஹர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மத்திய பகுதி செயலாளர் பூ காஜாஉசேன், பொருளாளர் கமால்பாஷா, 77வது வார்டு செயலாளர் சலீம், பொருளாளர் பயாஸ், 78வது வார்டு செயலாளர் ஜாகீர், பொருளாளர் சுபேர், மற்றும் கிளை நிர்வாகிகள் அலி, இஸ்மாயில், பாபு, மிர்ஷா, ஹாருண், ஷாருக்கான், மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் அனைத்து பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், உட்பட சுமார் 3000 திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 01.06.2018
எழுச்சியோடு நடைப்பெற்ற MKPயின் அமீரக செயற்குழு கூட்டம்!
அமீரகம்.ஜுன்.02., உலகமெங்கும் இந்தியர்களுக்கு மத்தியில் மனிதநேய சேவைகளை முன்னெடுத்து வரும் அமீரக (UAE) #மனிதநேய_கலாச்சார_பேரவை (MKP) செயற்குழு கூட்டம் துபாயில் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் துபை, அபுதாபி, ஷார்ஜா, அல்-அய்ன் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இனி துபை, அபுதாபி, ஷார்ஜா, அல்-அய்ன் நிர்வாகிகள் மாநில அந்தஸ்து பெற்று மாநகர நிர்வாகிகள் என்றும், அதற்கு கீழ் செயல்படும் அமைப்புகள் கிளைகள் என்றும், மொத்த அமீரக நிர்வாகம் என்பது மண்டல என்றும் அழைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அஜ்மான், உம்முல் கொய்ன்,புஜெரா, ராசல்கைமா ஆகிய மாநகரங்களை சீரமைத்து கட்டமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. தாயகத்திலிருந்து வருபவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்று கொடுப்பது, அமீரகத்தில் இருப்பவர்களுக்கு தாயகத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து கொடுப்பது, ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை தமிழர்களுக்கு ஏற்படுத்துவது, இங்கு வாழும் தமிழர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ நட்பை வலிமைப்படுத்துவது, சமூக இணையதள பதிவுகளில் சமூக நல்லிணக்கத்தை நுட்பமாக முன்னெடுப்பது, ஐக்கிய அரபு அமீரக அரசின் சிறப்புகளை தமிழர்கத்தில் பரப்புவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA
துபை MKP இஃப்தார் நிகழ்வில்… தூத்துக்குடி தியாகி ‘ஸ்னோலின்’ பெயரில் நுழைவாயில்….! காஷ்மீர் குழந்தை ‘ஆஃசிபா’ பெயரில் அரங்கம்….! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்பு!
அமீரகம்.ஜூன்.02., ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP)யின் சார்பில் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமீரக MKPயின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரும் எழுச்சியோடு மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரில், வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிர் துறந்த 17 வயது சகோதரி '#ஸ்னோலின்' பெயரை சூட்டியிருந்தனர். அதுபோல, அரங்கத்திற்கு காவி தீவிரவாதிகளால் காஷ்மீரில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி இறந்த அன்பு குழந்தை #ஆஃசிபாவின் பெயரை சூட்டியிருந்தனர். நோன்பு துறப்புக்கு முன்பாக, தூத்துக்குடி #ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் 1 நிமிடம் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இந்த மூன்று நிகழ்வுகளும் தேசத்தை கடந்து வாழும் இந்தியர்களிடம் ஏற்பட்டிருக்கும் வலிமையான அரசியல் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இருந்தது. இதில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொது செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார்கள். பிறகு துண்டு சீட்டுகள் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். 6 மணிக்கெல்லாம் கூட்ட அரங்கம் நிறைந்து. அரங்கத்திற்கு வெளியில் மக்கள் திரண்டிருந்தனர்.
எல்லா வேத நூல்களையும் எல்லோரும் படிக்க வேண்டும்..! அல்-அய்ன் குர் ஆன் இலக்கிய விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
ஐக்கிய அரபு அமீரகம்-அல் அய்ன் Indian Social Centre சார்பில், புனித ரமலானை முன்னிட்டு, திருக்குர்ஆன் ஓதும் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியுள்ளார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின் வருமாறு... ISC அமைப்பில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என எல்லோரும் இந்தியர்கள் என்ற சகோதரத்துவ உணர்வோடு இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் உலகத்திற்கு நாம் கூறும் செய்தியாகும். இத்தகைய ஒற்றுமைத்தான் திருக்குர்ஆன் போதிக்கிறது, அன்பை, சகோதரத்துவத்தை, சகிப்புத் தன்மையை, வணிகத்தை, அரசியலை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை, சமத்துவத்தை, வாழ்வியலைதான் குர்-ஆன் போதிக்கிறது. அதனால்தான் இதை உலகப் பொதுமறை என்கிறோம். இது அனைவருக்குமான வழிகாட்டும் வேத நூலாகும். இதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். திருக்குர் ஆனின் சிறப்பு என்னவென்றால் அது யாராலும் எழுதப்பட்டதல்ல- வானவர் ஜிப்ரயில் (அலை) மூலம் ஒலி வடிவில் அது நபிகளாருக்கு அருளப்பட்டது. குரல் வடிவில் வழங்கப்பட்ட வேத வரிகளை பின்னர் கலீபாக்கள் அதை தொகுத்து ஓரே குர் ஆன் என உலகத்திற்கு அளித்தார்கள். திருக்குர்ஆன் மிகச் சிறந்த இலக்கிய நூலும் கூட. இதை மிகச்