(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. வன்னிய சமுதாய மக்களின் போர்க்குரலாகவும், சமூக நீதி சார்ந்த கொள்ளைகளில் சமரசமற்ற போராளியாகவும் திகழ்ந்தவர் என்ற அடையாளங்களோடு அவர் விடை பெற்றிருக்கிறார். மருத்துவமனையில் அவரை சென்று பார்க்க வேண்டும் என்று விரும்பிய போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் இருப்பதால், சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவர் வன்னிய சமுதாய மக்களை தாண்டி பிற சமூக மக்களின் நலன்களுக்கும் குரல் கொடுத்தார். கல்வி, வேலைவாய்ப்பு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் அவரது பங்கும் முக்கியமானது. அவரை இழந்து தவிக்கும் வன்னிய சமுதாய மக்களுக்கும், குடும்பத்தினருக்கும் மஜக வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 26/05/2018.
Month:
வேல்முருகன் கைதில் உள்நோக்கம்! மஜக கடும் கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை..) தூத்துக்குடியில் கலவரத்தாலும், துப்பாக்கிசூட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற #தமிழக_வாழ்வுரிமை_கட்சி தலைவர் #வேல்முருகன் அவர்களை காவல்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளது. சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கும் சுங்க கட்டண எதிர்ப்பு தெரிவித்து அவர் நடத்திய போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக, இப்போது அவரை கைது செய்திருப்பதாக காவல்துறை கூறுவதை ஏற்க முடியவில்லை. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தூத்துக்குடி சம்பவத்தை முன்னிட்டு கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும், அதை கண்டிகிறோம். பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை யாரும் சென்று சந்தித்து விடக்கூடாது என்ற குறுகிய நோக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற போக்குகள் தமிழக காவல்துறைக்கு மேலும் களங்கங்களையே உருவாக்கும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 26/05/2018.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!
மதுரை. மே.26., #ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது, 100வது நாளில் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி 15-க்கும் மேற்பட்ட பொது மக்களை படுகொலை செய்த தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பயங்கரவாத செயலை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் #புரட்சிகர_தொழிலாளர்_முன்னனி மற்றும் ஒடுக்கப்பட்ட_மக்கள்_முன்னனி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் மதுரை வடக்கு மாவட்டசெலாளர் ஒத்தக்கடை பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினர், இதில் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம் 25-05-2018
தமிழகம் முழுதும் வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்..! அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் ஆர்பாட்டத்தில் மஜக பங்கேற்பு…!!
அறந்தாங்கி.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படும் ஸ்டெர்லைட் உயிர்கொல்லி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி அவர்கள் கலந்து கொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார். இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் ஜாமீன், மாவட்ட துணை செயலாளர் அரசை அபுதாகிர் ஆகிய மஜக நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் திமுக, காங்கிரஸ், மமகமற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 25.05.2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MJTS ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
திருவொற்றியூர்.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) ஐ.ஓ.சி வாகன ஓட்டுநர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைப்பெற்றது. இதனையொட்டி திருவொற்றியூர் பகுதி #MJTS செயலாளர் பி.ராஜா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) திருவொற்றியூர் பகுதி செயலாளர் எச்.காதிர் உசேன் பகுதி பொருளாளர், எம்.எஸ்.காஷிம்ஷெரிப், பகுதி துணை செயலாளர் ஜே.ஜீலானி, பகுதி IT Wing செயலாளர் எ.பேரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் எல்.ஜாஃபர் சாதிக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.நிஜாம் பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஜக மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹமது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அ.அஸாருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தொழிலாளர்கள், பொதுமக்கள், கட்சியினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 24.05.2018