ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!

மதுரை. மே.26., #ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது, 100வது நாளில் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி 15-க்கும் மேற்பட்ட பொது மக்களை படுகொலை செய்த தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பயங்கரவாத செயலை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் #புரட்சிகர_தொழிலாளர்_முன்னனி மற்றும் ஒடுக்கப்பட்ட_மக்கள்_முன்னனி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் மதுரை வடக்கு மாவட்டசெலாளர்
ஒத்தக்கடை பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினர், இதில் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்
25-05-2018