ரியாத் மண்டல இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ரியாத் மண்டல ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் பொருளாலர் நிவாஜிதீன், துணைச் செயலாளர்கள் ஹாஜாமைதின், நைனார், சிக்கத்தர், சாதிக் பாஷா, முகம்மது யூசுப்தின், IT WING நிர்வாகிகள் காயல் காதர் சாகிப் (தங்க தம்பி), முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, ஒலாயா, தரயா பகுதிகளில் கிளைகள் துவங்குவது, இலவச குர்ஆன் வழங்குவது, தர்பியா நிகழ்ச்சி நடத்துவது, இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக உம்ரா செல்வதற்கு ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இன்று ரியாத் நசியா பகுதியில் கிளை துவங்கப்பட்டது. ரியாத்தில் பணிபுரியும் சகோதரர்கள் IKP-யில் சேர்ந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) ரியாத் மண்டலம்.
தமிழகம்
தமிழகம்
முதல்வருடன் நாகை MLA சந்திப்பு ..!
நாகை தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி .கே. பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் . துறைமுகம் மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட 7 முக்கிய தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் கையளித்தார் . அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி அவர்களும் உடனிருந்தார் . இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் முதல்வர் , தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கூறினார் . பிறகு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு . ஜெயக்குமார் அவர்களை சந்தித்து தொகுதியில் இருக்கும் மீனவர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் எடுத்துக்கூறி அவற்றை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
பரமக்குடியில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சார்பாக மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எமனை சாகுல் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி மேலபள்ளிவாசல் கிளை சார்பாக மேலபள்றிவாசல் அருகிலும், எமனேஸ்வரம் கிளையின் சார்பாக கான்ஷாகிப் திடல் மற்றும் திப்புசுல்தான் தெரு ஆகிய இரு இடங்களில் பிரம்மான்டமாக நம்முடைய புரட்சி கொடி பட்டொளிவீசி பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் நம் புரட்சிகொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்செயளாளர். முஹம்மது இலியாஸ், பொருளாளர்.Mmசெய்யது, மா.து.செ. அப்துல்கபூர், மற்றும் பைசல் ரசித், பரமக்குடி பொருளாளர் அப்துல்அஜிஸ் மாணவர்இந்தியா செயளாளர் ஆசிக். எமனேஸ்வர கிளை செயளாளர். ஹபிப்ரஹ்மான் பொருளாளர் தமீம்அன்சாரி, மற்றும் மத்தியசென்னை மாவட்ட செயளாளர் முஹம்மது ஹாலித் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி இராமநாதபுரம் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை கூட்டம்…
திருவாரூர்.மார்ச்.03., கடந்த 02/03/2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை ஆலோசனை கூட்டம் முன்னால் மாவட்ட துணை செயலாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அவர்களும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது அசாருதீன் ஆகியோர் முன்னிலையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அப்பகுதியில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் மற்றும் முன்னால் மாவட்ட துணை செயலாளர் எரவாஞ்சேரி அபுல் கலாம் ஆசாத் அவர்களும் இரண்டு புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றி சிறப்பித்தனர். மற்றும் 20 புதிய உறுப்பினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) திருவாரூர் மாவட்டம் 02/03/2017
நெடுவாசல் போராட்டக்களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி…
புதுகை.மார்ச்.02., புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டக்களத்திருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் வருகைதந்து ஆதரவு தெரிவித்தார்கள். அவரை போராட்டக் குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் பேசும்போது அவரது கருத்தை வரவேற்று அடிக்கடி கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். குறிப்பாக மாணவர்கள் ஆதரவு குரல் கொடுத்து முழக்கங்கள் எழுப்பினர். இன் நிகழ்வை தொலைக்காட்சிகள் நேரலைலாக ஒளிபரப்பினர். நெடுவாசல் ஊர் முழுக்க மத்திய மோடி அரசிற்கு எதிராக கூக்குரல் எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது. சாரை சாரையாக ஆண்களும் , பெண்களும் மத்திய அரசிற்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியபடியே வந்துகொண்டிருக்கின்றனர், வருகை தரும் அனைவரையும் ஊர்மக்கள் சார்பில் ஒரு குழு கைக்கூப்பி வரவேற்த்துக்கொண்டே இருக்கிறது. வருபவர்களுக்கு ஊர் மக்களே சமையல் செய்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கிராமம் முழுவதும் எழுச்சியாக இருக்கிறது. தமிழன் என்ற முழக்கமும், மண்ணை காப்போம் என்ற முழக்கமும் எங்கும் எதிரொலிக்கிறது. இப்போராட்ட களத்திற்கு பொதுச் செயலாளருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா,