கடலூர்.ஜூலை.09., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன்அன்சாரி MA.MLA மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். உடன் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் லால்பேட்டை நகரநிர்வாகிகள் களந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழிநுட்ப அணி, #MJK_IT_WING கடலூர் தெற்கு மாவட்டம். 09.07.2017
தமிழகம்
தமிழகம்
சிறைவாசிகள் விடுதலைக்கு சாதகமான முதல்வர் பதிலுக்கு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்..!
சென்னை.ஜூலை.08., இன்று காவல் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு எதிர்க்கட்சி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை MGR நூற்றாண்டு விழாவையொட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள். எப்போதுமே ஆளுங்கட்சியோடு மோதும் ஜெ. அன்பழகன் இன்று இக்கோரிக்கையை சிக்கல் இல்லாத வார்த்தைகளோடு முன்வைத்து போது அனைவரும் ஆச்சர்யத்ததோடு பார்த்தார்கள். இதற்கு பதில் அளித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் பேரறிவாளன் பரோல் குறித்து பரிசிலினையில் இருப்பதாகவும்,10 ஆண்டுகள் நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் (AGM) மற்றும் அதிகாரிகளிடம் கருத்து கேட்டிருப்பதாகவும், இது குறித்து பரிசிலிப்பதாகவும் கூறினார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி மேஜையை தட்டி ஆதரவளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அவையில் பேசிய முக்கிய பகுதிகள் பின்வருமாறு... மாண்புமிகு பேரவை துணை தலைவர் அவர்களே... இன்றைய தினம் சட்டப்பேரவையில் சிறைவாசிகளின் விடுதலை குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் அளித்த பதில் மகிழ்ச்சியளிக்கிறது. நானும் அண்ணன் தனியரசு, அண்ணன் கருணாஸ் அவர்களும் இக்கோரிக்கையை 15 நாட்களுக்கு
கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரம்… தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் முதல்வர் பதில்!
சென்னை.ஜூலை.08., கோயில், பள்ளிவாசல், தேவாலயங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA சபாநாயகரிடம் கொடுத்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடமும் பல விளக்கங்களை எடுத்துக் கூறினார். அதாவது கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிகளை 70 டெசிபல் அளவுக்கு பயன்படுத்துவது அல்லது 6 மாத கால அவகாசம் கொடுத்து ஸ்பீக்கர் பாக்ஸ் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது ஆகிய இரண்டில் ஒன்றையாவது பரீசீலிக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (08.07.17) சட்டபேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி தொடர்பாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் என பதிலளித்தார். தகவல்: மஜக தகவல் தொழில் நுட்பஅணி. சட்டமன்ற செய்தியாளர் குழு. சென்னை. 08.07.2017
புதிய தலைமுறை விருது வழங்கும் நிகழ்ச்சி…!
சென்னை.ஜூலை.08., புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆறாம் ஆண்டு விழாவையொட்டி கலை, இலக்கியம், சினிமா, தொழில், சமூக சேவை, சுற்றுச் சூழல் உள்ளிட்ட துறைகளில் சாதனைப் படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் டிரேட் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, பேரா. ஜவாஹிருல்லாஹ், தனியரசு MLA, வேல்முருகன், ஆளுர் ஷாநவாஸ், நக்கீரன் கோபால், பேரா. ஹாஜாகனி, மகேஷ் பொய்யாமொழி MLA, கோ.வி.செழியன் MLA, செம்மலை MLA உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன், இலக்கியவாதிகள், IAS, IPS அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கவிஞர் வண்ணதாசன், பேரா. கல்யாணி, பூவுலகின் நண்பர்கள். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் விருதுகளை பெற்றனர். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING சென்னை. 07.07.2017
பொள்ளாச்சி வக்ப் இடத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டியதை தடுத்து நிறுத்திய மஜக…!
பொள்ளாச்சி.ஜீலை.07., பொள்ளாச்சியில் சுமாா் 100 ஏக்கா் வக்ப் சொத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சுமாா் 120 பனைமரம், தேக்கு மரம் மற்றும் பலஜாதி மரங்கள் வெட்டப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. பொள்ளாச்சி நகரசெயலாளர் ஜெமீஷா தலைமையில் அவ்விடத்தில் அதிரடியாக மஜக நிா்வாகிகள் மற்றும் ஐக்கிய ஜமாத் நிா்வாகிகள் களத்திற்கு சென்று மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினார்கள் மற்றும் இது சம்பந்தமாக தாசில்தாா், சப் கலெக்டாரிடமும் மனுவும் கொடுக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் நமது சொத்தை மீட்க நமது பயணம் தொடரும் என்று பொள்ளாச்சி நகரசெயலாளர் ஜெமீஷா அவர்கள் தெரிவித்தார். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 07.07.17