#மஜக_பெங்களூரு_மாநகர_செயல்வீரர்கள்_கூட்டம்_மாநில_பொருளாளர்_பங்கேற்பு..! பெங்களூர். டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர செயல்வீரர்கள் கூட்டம் இன்று 02/11/17 ஏர்ப்போர்ட் ரோடு பகுதியில் மாவட்ட செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர துணை செயலாளர் ஹக்கிம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், மாநகர பொருளாளர் J.சல்மான் முன்னிலைவகிக்க, மாநகர துணைச்செயலாளர் SBS.சாகுல்ஹமீது தொகுப்புரை வழங்க, இக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மவ்லவி J.S.ரிஃபாயி ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள். இதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாபர் மசூதி வரலாறு பற்றியும், மசூதி இடிப்பு நடைபெற்றதை பற்றியும், மகஜவின் போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார்கள். மேலும் இந்த டிசம்பர்-6 அன்று இஸ்லாமிய சொந்தங்கள் மட்டுமல்லாது மாற்றுமத சகோதரர்கள், தோழமை கட்சி நிர்வாகிகளையும் அழைத்து போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதில் KMMT மாநில தலைவர் முக்தார் அஹ்மத், திப்பு கிராந்தி சேனா மாநில இளைஞர் அணி தலைவர் காலித் கான், K.G ஹல்லி வியாபாரிகள் சங்க தலைவர் அய்யூப் கான்,
தமிழகம்
தமிழகம்
ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு மஜக முன்னிலையில் உதவி பொருட்கள் விநியோகம்..!
சென்னை.டிச.01., சவுதிவாழ் தமிழ் சொந்தங்களால் சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு தேவையான பேட், செருப்புகள், போன்ற பல தரப்பட்ட பொருட்களை வாங்கி அதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு பிரித்து கொடுக்கும் படி (தாம்பரம் தாரிக்) அவர்களை தொடர்பு கொண்டு சவுதிவாழ் தமிழ் சொந்தங்கள் கேட்டு கொண்டார்கள். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் (29.11.2017) மாலை பொருட்கள் அனைத்தும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளிடம் வந்து சேர்ந்தது. அதை அமானிதமாக பெற்று கொண்ட மஜக நிர்வாகிகள். நேற்று (30.11.2017) ரோகிங்கியா இஸ்லாமியர்கள் இருக்கும் கேளம்பாக்கத்தில் மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அந்த பொருட்களை பிரித்து கொடுக்க வேண்டும் என்று அழைக்கும் போது மஜக நிர்வாகிகள் சொன்ன தகவல் கேளம்பாக்கத்தில் இருக்கும் மக்களுக்கு அனைத்து மக்களும் உதவி கரம் நீட்டுகிறார்கள். ஆனால் கேளம்பாக்கத்தை தாண்டி சுமார் 8 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் திருப்போரூர் என்ற இடத்திலும் ரோகிங்கியா இஸ்லாமியர்கள் டென்ட் போட்டு தங்கி ரோடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் கவர் போன்றவற்றை பெருக்கி அதை எடைக்கு
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி ஆத்துப்பாலம் கிளை நிர்வாகிகள் தேர்வு..!
கோவை.நவ.30., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி ஆத்துப்பாலம் கிளையின் ஆலோசனை கூட்டம் மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜாபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைச்செயலாளர் அப்துல் பஷீர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், பகுதி பொருளாளர் காதர், துணை செயலாளர்கள், அபு, ஹாருண் ரஷீது மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஆத்துப்பாலம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை செயலாளர் J.முகமதுஇஷாக், கிளை பொருளாளர் H.ஷாஜஹான், துணை செயலாளர்கள் A.பைசல்ரஹ்மான் (எ) ராஜா, A.அல் அமீன், S.அப்சல் அன்சாரி, ஆகியோர் மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.11.17.
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி செயல்வீரர்கள் கூட்டம்..!
கோவை.நவ.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், பகுதி பொருளாளர், காதர், துணை செயலாளர்கள் அபு, ஹாருண் ரஷீது, மற்றும் பகுதி, கிளை கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.. இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டுவது என முடிவுசெய்யப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.11.17
நாகை துறைமுக கேப்டனிடம் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு! துறைமுக மேம்பாடு குறித்து கேட்டறிந்தார்!
நாகை. நவ.30.,நேற்று (29.11.17) நாகப்பட்டினம் துறைமுக அலுவலகத்திற்கு வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் துறைமுக அலுவலர் கேப்டன் ஜோ.மானேக்ஷா அவர்களை சந்தித்து புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார். முதலாம் எண் கூண்டு, இரண்டாம் எண் கூண்டு, மூன்றாம் எண் கூண்டு என 10 வரைக்கான விளக்கங்களையும், செயல் முறைகளையும் கேட்டறிந்தார். வானிலை மையமும், மாவட்ட கலெக்டர் அலுவலகமும் இணைந்து தகவல்களை பரிமாறிய பிறகே புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவதாக அங்கிருந்த அதிகாரிகள் விளக்கமளிந்தனர். பிறகு நாகை துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தற்பொழுது தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பாமாயில் கப்பல்களில் இறக்கப்படுவதாக கூறினார்கள். துறைமுக செயல்பாடுகளை அதிகரிப்பது குறித்தும், துறைமுகத்தை மேம்படுத்துவதும் குறித்தும் திட்ட அறிக்கைகளை தருமாறும், இது குறித்து தமிழக அரசுடன் தொடர்ந்து பேசி நடவடிக்கைகளை மேம்படுத்த துணை நிற்பதாகவும் M.தமிமுன் அன்சாரி MLA, அதிகாரிகளிடம் கூறினார். சட்டமன்றத்தில் நாகை துறைமுகத்தை மேம்படுத்துவது குறித்து அவர் மூன்று முறை பேசியுள்ளதும், முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் அவர் நேரில் வலியுறுத்தியதும் குறிப்பிடதக்கது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 30.11.17