புதுகை.மார்ச்:11., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம்... தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா முன்னிலையிலும் நடைப்பெற்றது... மாவட்ட செயலாளர் துரைமுஹம்மது வரவேற்று பேசினார் இந்த கூட்டத்தில் தலைமையின் அறிவுறுத்தலின்படி நிர்வாக சீர்திருத்ததிற்க்காக அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்... இந்த கூட்டத்தில் மாநில தொழில் நுட்ப அணி செயலாளர் கோட்டை முஹம்மது ஹாரீஸ், மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் மாவட்ட பொருலாளர் ரஹீம் தாலிஃப், அறந்தை அஜ்மீர் அலி, அப்துல்ஹமீது, முபாரக்அலி, நகரச்செயலாளர் முஹம்மது குஞ்சாலி உட்பட மகஜ தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்... முடிவில் மாவட்ட பொருலாளர் ரஹீம்தாலிஃப் நன்றி கூறினார். #தகவல்_தொழில்_நுட்பஅணி #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WINK #புதுக்கோட்டை_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
திண்டுக்கல்லில் மாணவர் இந்தியா விழிப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்லில் இன்று (12.03.17) மாணவர் இந்தியாவின் சார்பில் 'சமூக நலனில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்' நடைப்பெற்றது. இதில் பொது சேவை, பண்பாடு, தன்னம்பிக்கை, நேர்த்தியான செயல்பாடுகள், மாணவர் சமூகத்தின் வாழ்வியல், பெற்றோரின் கடமைகள், மன அழுத்தங்களை தாண்டி தேர்வில் வெற்றி பெறுதல், என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக வகுப்பெடுத்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே எழுச்சியுரையாற்றினார். இந்நிகழ்வில் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியை குருவாம்மாள், ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் பீர்பாஷா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மு.ப. கணேசன், கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் யூசுப் அன்சாரி மற்றும் வினோத் ராஜதுறை உள்ளிட்டோர் உரையாற்றினர். மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், பஷீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியை செம்மைப்படுத்தினர். மாணவர் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது பிர்தௌஸ், மரியமனோஜ், சதீஸ் குமார், முனாப்தீன், மோகன் காமாட்சி, உமர் முக்தார், ரபிக் உள்ளிட்டோர்
சர்வதேச விசாரனையை விரைவுபடுத்து கைய்யெழுத்து இயக்கம் மஜக பங்கேற்பு!
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தாமதிக்காமல் நடத்தப்பட வேண்டும் என முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் 11.3.2017 காலை சரியாக 9.00 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம், மாவட்ட பொருளாளர் தாஹா மற்றும் பூவிருந்தவல்லி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வட சென்னை மாவட்டம்
உருதுமொழி தேர்வுத்தாள் விவகாரம் ஜமாத் நிர்வாகி மஜகவிற்கு நன்றி!
சென்னை இராயப்பேட்டை தஸ்தகீர் சாஹிப் ஒலியுல்லா பள்ளிவாசலின் செயலாளரும், உருது மொழி தன்னார்வளருமான M.அஸ்வாக் ரஹ்மான் அவர்கள் இன்று மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது அவர்களை சந்தித்து பொதுத்தேர்வில் உருது பாடத்திட்டத்திற்கான வினாத்தாள் வெளியிட முறையான நடவடிக்கை எடுத்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் ஆகியோர் உடன் இருந்தனர். 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களையும் மற்றும் அதிகாரிகளையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. தகவல் தொழில்நுட்ப
திருவள்ளூர் வக்ஃப் சொத்து விவகாரம் அமைச்சரை சந்தித்த மஜக பொருளாளர்!
திருவள்ளூர்.மார்ச்.09., திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் 'அஹ்மத் ஷா படேமகான்' பள்ளிவாசலுக்கு சொந்தமான தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் இருக்கும் சர்வே எண் 229/3-ல் அமையப்பெற்ற 100 கோடி மதிப்புடைய 2.44 ஏக்கர் நிலம், 3 மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் மஜக தலையிட ஜமாத் நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்தனர். இதனடிப்படையில் இன்று (9.3.2017) மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தனர். இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது அவர்கள் ஜமாத் நிர்வாகிகளோடு தலைமைச் செயலகம் சென்று வக்ஃப் அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபீல் அவர்களை சந்தித்து முறையிட்டார். உடனடியாக அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். சம்மந்தப்பட்ட அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணி எதுவும் நடைபெற்றால் உடனடியாக தடுத்து நிறுத்தவும் கூறினார். மேற்கொண்டு தொடர்ந்து இந்த விசயத்தில் கவணம் செலுத்தி வக்ஃப் சொத்தை மீட்க நவடிக்கை மேற்கொள்வதாகவும் மஜக பொருளாளரிடம் வாக்குறுதியளித்தார். இச்சந்திப்பின்போது மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், வேலூர் மே.மாவட்ட செயலாளர்