(தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.சேது கருணாஸ் MLA ஆகியோர் கூட்டாக வெளியிடும் அறிக்கை) நேற்று நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் மாண்புமிகு தம்பிதுரை அவர்கள் தமிழில் பேசும்போது அதற்கு நாடாளுமன்றத்தில் வட இந்திய எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவர் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இது தமிழை அவமதிக்கும் செயலாகும் அப்பட்டமான மொழிவெறி என்பதிலும் ஐயமில்லை. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பேசலாம் என்று விதி இருக்கிறது. இந்தியில் ஒருவர் பேச உரிமை இருக்கும்போது, தமிழிலும் பேச உரிமை இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை சபாநாயகர் தமிழில் பேசியதை இடையூறு செய்து தடுத்து நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான இது போன்ற செயல்கள் நாடாளுமன்றத்திலேயே அரங்கேறுவது கடும் வேதனையளிக்கிறது. தமிழர்களை நோகடிக்கும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் அளித்து , இதுபோன்ற
சட்டமன்றம்
உமறுப்புலவருக்கு விழா! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச் செயலாளர் நன்றி…
சென்னை.ஆக.03., தமிழில் 13-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெருங்காப்பியங்கள் எழுதப்படவில்லை. 16-ம் நூற்றாண்டில் தான் உமறுப்புலவர் அவர்கள் கீழக்கரையின் வள்ளல் சீதக்காதி உதவியோடு சீறாப்புராணம் நூலை எழுதி அந்த குறையை தீர்த்தார். அவருக்கு வருடம் தோறும் தமிழக அரசு விழா எடுக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்துமாறு எட்டயபுரத்தை சேர்ந்த உமறுப்புலவர் சங்கத்தினர் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம் கோரிக்கை வைத்தனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களும் இதை வலியுறுத்தினார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இக்கோரிக்கையை M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வலியுறுத்து பேசினார். முதல்வரிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு உமறுப்புலவருக்கு வருடந்தோறும் அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வரை சந்திக்க, உமறுப்புலவர் சங்கம், இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகியவற்றின் சார்பில், மஜக பொதுச் செயலாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்க விருப்பதால் தன்னால் வர இயலாது என தெரிவித்தார். இந்நிலையில் தனது கோரிக்கையை ஏற்று உமறுப்புலவருக்கு அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்ததற்காக முதல்வர் எடப்பாடி கே
காவிரிப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள்!
#காவிரிப்பகுதியை_வேளாண்_மண்டலமாக_அறிவிக்க_வேண்டும் ! #சிறுபான்மை_கல்லூரிகளின்_சிக்கல்களை_இலகுவாக்க_வேண்டும் ! #நல்ல_திரைப்படங்களை_அடையாளம்_கண்டு_அரசு_ஊக்குவிக்க_வேண்டும்! #ரோஹிங்கியா_மக்களை_பாதுகாக்க_வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள் ! (கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் நிறைவு பகுதி) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே … #காவிரிப்பகுதியை பாதுகாக்க வேண்டும் நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை சமவெளிப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே, காவேரி ஆறும் அதனுடைய கிளை நதிகளும் பாயக்கூடிய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்குப்பகுதி, கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி ஆகியவைகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்து, அங்கு விவசாயத்திற்கு எதிராக எந்தத் திட்டங்களையும் அமல்படுத்தாமல் விவசாயத்தைப்பாதுகாக்க மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு அறிவிப்பு செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதுபோன்று, தட்கல் முறையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விவசாய மின்னிணைப்புகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை. தஞ்சை உள்ளிட்ட டெல்டா விவசாயிகளின் நலன்கருதி, மேலும் 3000 மின்னிணைப்புகளை காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும். அதில் 1500 இணைப்புகளை தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். #கல்வி நிலையங்களின் கோரிக்கைகள் சிறுபான்மைக் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை
சீனியர் பத்திரிக்கையாளர் அசோசியேசன் சார்பில் நாகை MLA அவர்களுக்கு வாழ்த்து!
சென்னை.ஜூலை.26., தமிழ்நாடு சீனியர் பத்திரிக்கையாளர்கள் அசோசியேஷன் சார்பில் சட்டமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் சம்பந்தமாக குரல் கொடுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு. SENIOR JOURNALISTS ASSOCIATION, TAMIL NADU (REGD.NO.TN/NM/1995) பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் மட்டும் உயர்த்த படாமல் நான்கரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததை தாங்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்த்தகோரி குரல் எழுப்பியதை தமிழக அனைத்து பத்திரிக்கையாளர்களும் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த அவையில் பத்திரிக்கையாளர் நாலனில் அக்கரை கொண்டு குரல் எழுப்பிய ஒரே சட்ட மன்ற உறுப்பினர் தாங்கள் என்பதை நெகிழ்வுடன் நினைவுகூர்கிறோம். தங்கள் கோரிக்கை படியே கடந்த 19.7.17-ல் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மாண்புமிகு. எடப்பாடியார் அவர்கள் ஓய்வூதியத்தை 10,000-ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு செய்துள்ளது தங்கள் கோரிக்கைக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு தங்கள் கடிதத்தில் குறிப்பட்டிருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, சென்னை. #MJK_IT_WING
புழல் சிறையில் மே- 17 இயக்க ஒருகிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி உடன் மஜக தலைவர்கள் சந்திப்பு…
சென்னை.ஜூலை.25., தமிழக உரிமைக்காக போராடிய காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கபட்டுள்ள மே-17 இயக்க ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தமிழின உணர்வாளர்களை இன்று சென்னையிலுள்ள புழல் மத்திய சிறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, A.சாதிக் பாஷா மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அஹமது ஆகியோர் உடன் சென்றனர். இச்சந்திப்பின் போது சட்டமன்றத்தில் தங்களுக்காக குரல் கொடுத்ததற்கும், அதை பொது விவாதமாக மாற்றியதற்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மஜக பொதுச்செயலாளரிடம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காக மஜக எடுத்துவரும் களப்பணிகள் மற்றும் செயல்பாடுகளையும் பாராட்டினார். அவர்களின் விடுதலைக்கு வாழ்த்துக்களை கூறி மஜக தலைவர்கள் புறப்பட்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING தலைமையகம், சென்னை. 25.07.2017