புழல் சிறையில் மே- 17 இயக்க ஒருகிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி உடன் மஜக தலைவர்கள் சந்திப்பு…

image

image

image

சென்னை.ஜூலை.25., தமிழக உரிமைக்காக போராடிய காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கபட்டுள்ள மே-17 இயக்க ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தமிழின உணர்வாளர்களை இன்று சென்னையிலுள்ள புழல் மத்திய  சிறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்தார்.

அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, A.சாதிக் பாஷா மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அஹமது ஆகியோர் உடன் சென்றனர்.

இச்சந்திப்பின் போது சட்டமன்றத்தில் தங்களுக்காக குரல் கொடுத்ததற்கும், அதை பொது விவாதமாக மாற்றியதற்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மஜக பொதுச்செயலாளரிடம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காக மஜக எடுத்துவரும் களப்பணிகள் மற்றும் செயல்பாடுகளையும் பாராட்டினார்.

அவர்களின் விடுதலைக்கு வாழ்த்துக்களை கூறி மஜக தலைவர்கள் புறப்பட்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
தலைமையகம்,
சென்னை.
25.07.2017