சீனியர் பத்திரிக்கையாளர் அசோசியேசன் சார்பில் நாகை MLA அவர்களுக்கு வாழ்த்து!

image

image

சென்னை.ஜூலை.26., தமிழ்நாடு சீனியர் பத்திரிக்கையாளர்கள் அசோசியேஷன் சார்பில் சட்டமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் சம்பந்தமாக குரல் கொடுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு.

SENIOR JOURNALISTS ASSOCIATION, TAMIL NADU (REGD.NO.TN/NM/1995)

பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் மட்டும் உயர்த்த படாமல் நான்கரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததை தாங்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்த்தகோரி குரல் எழுப்பியதை தமிழக அனைத்து பத்திரிக்கையாளர்களும் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த அவையில் பத்திரிக்கையாளர் நாலனில் அக்கரை கொண்டு குரல் எழுப்பிய ஒரே சட்ட மன்ற உறுப்பினர் தாங்கள் என்பதை நெகிழ்வுடன் நினைவுகூர்கிறோம்.

தங்கள் கோரிக்கை படியே கடந்த 19.7.17-ல் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மாண்புமிகு. எடப்பாடியார் அவர்கள் ஓய்வூதியத்தை 10,000-ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு செய்துள்ளது தங்கள் கோரிக்கைக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் கிடைத்த வெற்றி.

இவ்வாறு தங்கள் கடிதத்தில் குறிப்பட்டிருந்தனர்.

தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
சென்னை.
#MJK_IT_WING