திண்டுக்கல்.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டும், சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்ற திண்டுக்கல் கிழக்கு வாட்டாச்சியர் திருமதி கற்பகத்தின் அடாவடிதனத்தை எதிர்த்து கேள்வி கேட்ட. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் யூ.மரைக்காயர் சேட் அவர்கள் மீது போலீசில் பொய் புகார் அளித்து கைது செய்த திண்டுக்கல் கிழக்கு வட்டாசியரை கண்டித்து மாவட்ட செயலாளர் ஏ.ஹபிபுல்லாஹ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மஜக இணை பொதுச் செயலாளர் கே.எம்.மைதீன் உலவி அவர்களும், மாநில துணைசெயலாளர் எம்.திண்டுக்கல் அன்சாரி அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்பரசு அவர்களும் கண்டன உரை நிகழ்தினார்கள். மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றியம், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்களும், பெண்களும் திரளாக கலந்துக் கொண்டனர்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING திண்டுக்கல் கிழக்கு. 06.05.2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம்…
தூத்துக்குடி.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று 05-05-2017 மாலை 4மணியளவில் காயல்பட்டினம் ஹனியா மினி ஹால் துபைல் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப் முன்னிலை வகித்தார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஸிக் முஸம்மில் வரவேற்புரையாற்றினார்கள். இதில் மாநில செயலாளர் N.A.தைமிய்யா M.Sc மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி ஆகிய இருவரும் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக நகர செயலாளர் S.M.ஜிப்ரி நன்றி உரையாற்றினார் மாவட்டத்தின் பல்வேறு கிளையில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய மாநில செயலாளர் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி எடுத்துரைத்தார் மேலும் நிர்வாகிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 1.தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2.கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், 3.தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமாக இந்தி தினிப்பில் ஈடுபட்டு
எழும்பூர் பகுதியில் மஜகவின் கொடியேற்றம் :மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது ஏற்றிவைத்தார்கள்…
சென்னை.மே.05., நேற்று 04.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி புளியந்தோப்பு 77வது கிளையில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்கள். உடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட துணை செயலாளர் ரவுப் ரஹீம், மாநில செயற்குழு உறுப்பினர் அபு தாஹிர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமிர் அப்பாஸ் ஆகிய மாநில,மாவட்ட நிர்வாகிகளும், பகுதி செயலாளர் T.M.யூசுப், து.செயலாளர் அப்துல் கலாம், A.Y.முஹம்மது ஜயுப், I.முஹம்மதுஅலி, S.குதுரத்துல்லா, K.பெரோஸ், A.முஹம்மது சாதிக், I.இம்ரான், சுல்த்தான் மொய்தீன் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, மத்திய சென்னை மாவட்டம். #MJK_IT_WING 04.05.2017
விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? பட்டமளிப்பு விழாவில் M.தமிமுன் அன்சாரி MLA உரை !
விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? மாணவர்கள் சிந்திக்க வேண்டும் ! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை ! நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற EGS பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30 அன்று 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்துகொண்டார் . தொடர்ந்து 2 மணி நேரம் நின்றுகொண்டே 598 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். மருத்துவ ஓய்வு காரணமாக ஒருமாதம் வரை நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அன்பு வேண்டுகோளை ஏற்று, நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவரது குரல் பலவீனமான இருந்தாலும், கருத்துகள் வீரியத்தோடு வெளிப்பட்டு, பலத்த கரகோஷங்களை பெற்ற வண்ணம் இருந்தது.அவரை பின்னணி இசையுடன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று முன்னுரை கொடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்தபோது மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர் . தனது உரையில் , கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று வர்ணித்தவர், கல்லூரி முடித்த பிறகு அந்த நாட்களை நினைத்தால் கண்ணீர் முட்டும் என்றார்.
E.G.S கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக M.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்பு!
நாகை. ஏப்.30., நாகப்பட்டினம் E.G.S பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியின் 2016-2017 க்கான பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30-04-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி MA.,MLA., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லுரியின் சேர்மன் ஜோதிமணி ஜி.எஸ்.பிள்ளை, செயலாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் டாக்டர் நட்ராஜ் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கெடுத்தனர். கல்லூரி நிர்வாகமும், பேராசிரயர்களும், மாணவ மாணவிகளும் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்ததால் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து சிறப்பித்துதந்தது அணைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகை மாவட்டம் 30.04.2017