விடுதலை பெற்று வீடு திரும்பிய திண்டுக்கல் மீரான்மைதீன்..! வரவேற்று அழைத்து சென்ற மஜகவினர்..!!


திண்டுக்கல்.டிச.04.., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடும் முயற்சியால் ஆயுல் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் விடுதலை பெற்று நேற்று வீடு திரும்பினார்.

அவர்களை திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று வீட்டிற்க்கு அழைத்து சென்றனர்.

நெகிழ்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து தனது விடுதலைக்காக பேசிய மஜக-வின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும், மஜக-வின் தொடர் முயற்சிகளுக்கும் நன்றி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்
03-12-2019