ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பூம்புகார் அருகில் நடைபெற்றது. ிதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, அன்வர் பாஷா, முகமது பீர்ஷா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சேக் இப்ராஹிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷேக்மைதீன், சையது முகமது மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 27.09.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
கோவையில் ரயில் மறியல் போராட்டம்! MJTS தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு! திரளானோர் கைது!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக செப் 27 இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அப்துல் சமது, அவர்கள் திரளானோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி நிர்வாகிகள் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 27.09.2021 #IStandWithFarmers #mjkstandwithfarmers
கிழக்கு கடற்கரை சாலை மறிக்கப்பட்டது! டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முழக்கம்!
ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விவசாய அமைப்புகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களங்களிலும் மனித நேய ஜனநாயக கட்சி தொடர்ந்து ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறது. இந்திலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், CPM, CPI உள்ளிட்ட தேசி ய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி , ராஷ்டீரியா ஜனதா தளம், போன்ற பெரிய மாநில கட்சிகளும் ஆதரவளித்தன. தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியனவும் பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தின. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்து தனித்து ஆர்ப்பாட்டங்களை பரவலாக நடத்தி வருகின்றனர். இது தவிர தமிழகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் CPM, CPI ஆதரவு விவசாய
குவைத் மஜகவின் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி…!
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குவைத் சிட்டி பாலிவுட் உணவகத்தில் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது மஜகவின் மார்க்க பிரிவாம் இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP சார்பாக கடந்த ரமலான் மாதத்தில் நடைபெற்ற தொடர் காணொளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்று தொகுத்து வழங்க மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முகம்மது அவர்கள் கிராத் ஓதி துவக்கியத்துடன் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்ணை தோழர்கள் பிரச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோ.முகவை அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு இதுபோன்று இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார் இதில் வெற்றிபெற்ற மொத்தம் 8 நபர்களில் குவைத்தில் உள்ள 6 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தாயகத்தில் உள்ள 2 வெற்றியாளர்களுக்கு பரிசுகளை நேரடியாக அவர்களது முகவரிக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது #பரிசுகள்_பெற்ற_வெற்றியாளர்கள் : - நிரவி ஹாஜா நஜ்முதீன், குவைத் -
இந்திய விடுதலை போராட்ட மாவீரர் திப்பு சுல்தான் விருது பெற்ற கோவை மஜகவினர்!
கோவை பூமார்க்கெட் ஹைதர்அலி திப்பு சுல்தான் பள்ளி வளாகத்தில் புணர் நிர்மாணம் மற்றும் கொரோனா காலத்தில் சேவையாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மனிதநேய ஜனநாயக கட்சிக்கு பள்ளி வாசல் நிர்வாகத்தின் சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஏவுகணையின் தந்தை மாவீரன் திப்பு சுல்தான் விருதை மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது, அவர்கள் வழங்கினார். மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையிலான நிர்வாகிகள் விருதை பெற்றுக்கொண்டனர். இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR. பதுருதீன், தொழிற்சங்க மாவட்டதலைவர் அப்துல் சமது, மாவட்ட செயலாளர் ஷாஜகான், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து MJTS தொழிற்சங்கத்தினர், மஜக வின் பல்வேறு பகுதி, கிளை, நிர்வாகிகள் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 23.09.2021