கோவையில் ரயில் மறியல் போராட்டம்! MJTS தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு! திரளானோர் கைது!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக செப் 27 இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அப்துல் சமது, அவர்கள் திரளானோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

இதில் மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி நிர்வாகிகள் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
27.09.2021

#IStandWithFarmers
#mjkstandwithfarmers