(M.தமிமுன் அன்சாரி MLA - வின் விளக்கம்) அன்புக்குரிய நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி சகோதர … , சகோதரிகளே … நீங்கள் நலம்பெற வாழ்த்துக்கள் ! சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தங்களுடன் கருத்து பரிமாற விரும்புகிறேன் . தங்களின் பேராதரவோடு நான் சட்டமன்ற உறுப்பினராகி, எளிமையான அணுகுமுறைகளோடு , நேர்மையாக பணியாற்றி வருகிறேன் . எமது தோழமை கட்சியான அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து , யார் முதல்வராக வரவேண்டும் என்ற விவாதம் அரசியலை பரபரப்பாக்கியது. இது குறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என தினமும் நூற்றுக்கணக்கான அலைப்பேசி அழைப்புகள் வந்தன . அதனை மதித்து வேறு யாரும் செய்யத் துணியாத அரிய முயற்சியை , என் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைப்படி முன்னெடுத்தேன் . கருத்துப் பெட்டியை வைத்து கருத்தாய்வை மேற்கொண்டேன் . அனைவருமே பாரட்டினார்கள் . அங்கு 2 ஆயிரம் படிவங்கள் பூர்த்தியாயின . ஆனால் மக்கள் மேலும் திரண்டார்கள் . திரு . நாகராஜன் என்பவர் தலைமையில் சிலர் வந்து “ OPS - க்கு ஆதரவாக போடுங்க “ என கூச்சல் எழுப்பியதால்
செய்திகள்
புளியங்குடியில் “மதவாத மோடிஅரசை கண்டித்து மஜகவின் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்”
நெல்லை.பிப்.19., நெல்லை மாவட்டம் புலியங்குடியில் இன்று 19-02-2017 ஞாயறு மாலை 6.30 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்" நடைபெற உள்ளது. எழுச்சியுரை: M. தமிமுன் அன்சாரி MA. மாநில பொதுச் செயலாளர் மஜக , நாகை சட்டமன்ற உறுப்பினர். S.S. ஹாரூன் ரஷீது M.Com, மாநில பொருளாளர் மஜக சிறப்புரை : K.M.மைதீன் உலவி மாநில இணைப் பொதுச் செயலாளர் மஜக N.A.தைமிய்யா மாநில செயலாளர் மஜக I. மீரான் நெல்லை மாவட்ட செயலாளர் மஜக இடம் : ரஹ்மத் பால்பண்ணை (காயிதே மில்லத் திடல்) தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) நெல்லை மாவட்டம். 19.02.17
ஐயா நல்லக்கண்ணுவுடன் சந்திப்பு…
இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஐயா.நல்லக்கண்ணு அவர்களை நேற்று இரவு அவரது இல்லத்தில் நானும், அவைத்தலைவர் நாசர் உமரீ அவர்களும் சந்தித்தோம். சமீபத்தில் ஐயா அவர்களின் மனைவியார் மரணமடைந்தார். பலமுறை நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூற முயன்றும் அது முடியாமல் போனது. நேற்று நாங்கள் போனதும், எனது சட்டமன்ற உரைகள் குறித்து பாராட்டியவர் தோழர் மகேந்திரனும், தோழர் லெனினும் என்னைப் பற்றி அடிக்கடி ஐயா அவர்களிடம் பேசுவதாகவும் கூறினார். அவரது அருமை துணைவியார் இழப்பு குறித்து நாங்கள் ஆறுதலாக பேசியப் போது, அந்த பொதுவுடைமை போராளியின் முகத்தில் சோகம் நிழலாடியது. அதைப்பற்றி மேலும் பேசாமல், மணல் கொள்ளை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேசியவர், சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் இல்லாத குறையை நீங்கள் போக்க வேண்டும் என்றும் பேசினார். ஐயா அவர்கள் மணல் கொள்ளை தொடர்பாக வழக்கறிஞரை சந்திப்பதற்காக புறப்பட்டார். தளராத உணர்வுகள், தடுமாறாத லட்சியங்கள் என ஐயா அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஐயா அவர்களின் காலத்தில் நாம் வாழ்வது ஒரு மகிழ்ச்சியாகும். காமராஜர், காயிதே மில்லத், கக்கன் போன்றவர்களை நாம் பார்த்ததில்லை. ஐயா நல்லக்கண்ணு அவர்கள் மூவரின் வடிவமாக நம்முன்
குவைத் மண்டலம் MKP சால்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்…
குவைத்.பிப்.16., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 17/02/2017 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு முர்காப் ரவுண்டானா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், கிளை து.செயலாளர் சகோ. சிதம்பரம் ஹாஜா மைதீன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தர அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு…
சென்னை.பிப்.16., முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மஜக பொதுச் செயலாளர் M.தமிம் அன்சாரி MLA அவர்களுக்கு அதிமுக அவைத் தலைவர் அலைபேசியில் அழைப்பு விடுத்தார். கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்களை அவைத் தலைவர் செங்கோட்டையன் அவர்களும், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 16.02.2017