திண்டுக்கல்லில் இன்று (12.03.17) மாணவர் இந்தியாவின் சார்பில் 'சமூக நலனில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்' நடைப்பெற்றது. இதில் பொது சேவை, பண்பாடு, தன்னம்பிக்கை, நேர்த்தியான செயல்பாடுகள், மாணவர் சமூகத்தின் வாழ்வியல், பெற்றோரின் கடமைகள், மன அழுத்தங்களை தாண்டி தேர்வில் வெற்றி பெறுதல், என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக வகுப்பெடுத்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே எழுச்சியுரையாற்றினார். இந்நிகழ்வில் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியை குருவாம்மாள், ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் பீர்பாஷா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மு.ப. கணேசன், கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் யூசுப் அன்சாரி மற்றும் வினோத் ராஜதுறை உள்ளிட்டோர் உரையாற்றினர். மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், பஷீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியை செம்மைப்படுத்தினர். மாணவர் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது பிர்தௌஸ், மரியமனோஜ், சதீஸ் குமார், முனாப்தீன், மோகன் காமாட்சி, உமர் முக்தார், ரபிக் உள்ளிட்டோர்
செய்திகள்
சர்வதேச விசாரனையை விரைவுபடுத்து கைய்யெழுத்து இயக்கம் மஜக பங்கேற்பு!
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தாமதிக்காமல் நடத்தப்பட வேண்டும் என முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் 11.3.2017 காலை சரியாக 9.00 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம், மாவட்ட பொருளாளர் தாஹா மற்றும் பூவிருந்தவல்லி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வட சென்னை மாவட்டம்
பஹ்ரைன் மண்டல மாதாந்திர கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் 10:03:2017 மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் சகோதரர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மஜக வின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையும், மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி.MLA அவர்களின் சிங்கப்பூர் விழா குறித்தும் மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்குகொண்டனர். புதிய பாதை,புதிய பணத்தின் தொடக்கமாக இருக்கும் ம ஜ வின் செயல்பாட்டால் சென்னை, இராமநாதபுரம், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எழுச்சிமிகு இளைஞர்கள் தங்களை ம ஜ க வில் இணைத்துக்கொண்டர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய கலாச்சாரப் பேரவை #MJK_IT_WING பஹ்ரைன் மண்டலம்
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் 10/03/2017 வெள்ளிக்கிழமை அன்று முர்காப் உடுப்பி ரெஸ்டாரெண்டில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது. இதில் முன்னதாக மண்டல IKP செயலாளர் சகோ. இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. பரங்கிப்பேட்டை ஹாஜா மஹ்தூம் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மண்டலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள், திட்டங்கள், நிர்வாக ரீதியான ஆலோசணைகளை வழங்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் √ கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கருத்தரங்க நிகழ்ச்சி நடத்துவது. √ உம்ரா பயணம் செல்ல IKP யின் மூலம் ஏற்பாடு செய்வது. √ இரத்த தானம் முகாம் நடத்துவது. √ ரமலான் மாதத்தில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது. √ உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. இதில் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக செயற்குழு உறுப்பினர் சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூற இனிதாக கூட்டம் நிறைவடைந்தது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம் 55278478 -
உருதுமொழி தேர்வுத்தாள் விவகாரம் ஜமாத் நிர்வாகி மஜகவிற்கு நன்றி!
சென்னை இராயப்பேட்டை தஸ்தகீர் சாஹிப் ஒலியுல்லா பள்ளிவாசலின் செயலாளரும், உருது மொழி தன்னார்வளருமான M.அஸ்வாக் ரஹ்மான் அவர்கள் இன்று மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது அவர்களை சந்தித்து பொதுத்தேர்வில் உருது பாடத்திட்டத்திற்கான வினாத்தாள் வெளியிட முறையான நடவடிக்கை எடுத்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் ஆகியோர் உடன் இருந்தனர். 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களையும் மற்றும் அதிகாரிகளையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. தகவல் தொழில்நுட்ப