குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது…


குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் 10/03/2017 வெள்ளிக்கிழமை அன்று முர்காப் உடுப்பி ரெஸ்டாரெண்டில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது. இதில் முன்னதாக மண்டல IKP செயலாளர் சகோ. இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. பரங்கிப்பேட்டை ஹாஜா மஹ்தூம் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மண்டலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள், திட்டங்கள், நிர்வாக ரீதியான ஆலோசணைகளை வழங்கினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

√ கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கருத்தரங்க நிகழ்ச்சி நடத்துவது.

√ உம்ரா பயணம் செல்ல IKP யின் மூலம் ஏற்பாடு செய்வது.

√ இரத்த தானம் முகாம் நடத்துவது.

√ ரமலான் மாதத்தில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது.

√ உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

இதில் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக செயற்குழு உறுப்பினர் சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூற இனிதாக கூட்டம் நிறைவடைந்தது.
மனிதநேய கலாச்சார பேரவை

மனிதநேய ஜனநாயக கட்சி

#MJK_IT_WING

குவைத் மண்டலம்

55278478 – 55260018 – 60338005

E-mail: mjkkuwait@gmail.com