( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA விடும் அறிக்கை ) திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த தோழர் பாரூக் என்பவர் படுகொலை செய்யப்பட்டதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது . யாருடைய கருத்தையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்வதே நேர்மையான அணுகுமுறையாகும் . மாறாக வன்முறையை கையில் எடுப்பது ஜனநாயக விரோத செயலாகும் . அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , தி வி க தோழர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் . இவ்விசயத்தில் உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18-03-2017
செய்திகள்
மஜகவின் மார்ச்.31 ஆவடி பொதுக்கூட்ட அழைப்பிதழை மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளுக்கு வழங்கினர்…
திருவள்ளூர்.மார்ச்.18., மஜகவின் திருவள்ளூர் (மே) மாவட்டம் நடத்தும் "ஜனநாயகத்தை பாதுகாப்போம்" மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச்.31 அன்று மாலை ஆவடியில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தின் அழைப்பிதழை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் L.செய்யது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் மஜக பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும், மாநில பொருளாளர் Ss. ஹாரூன் ரஷீது அவர்களுக்கும் வழங்கினர். இதில் மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் உடன் இருந்தார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் மேற்கு மாவட்டம். 18.03.2017
வழுத்தூரில் மஜகவின் முயர்ச்சியால் குப்பைக் கழிவுகள் அகற்றம்…
கும்பகோணம்.மார்ச்.16., வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) ஆரம்பப்பள்ளி அருகில் நீண்ட நாள் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனை அறிந்த மஜகவின் மாவட்ட செயலாளர் வழுத்தூர் P.முஹம்மது சேக் தாவூத் அவர்கள் குப்பைகள் எடுக்க விட்டால், வழுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அனைத்து குப்பைகளையும் கொட்டி போரட்டாம் நடத்தப்படும் என்று மஜக வழுத்தூர் கிளை சார்பில் அறிவித்தார்கள். அறிவித்த ஒரு சில நிமிடத்தில் வழுத்தூர் ஊராட்சி CLERK அறிவழகன் அவர்கள் சம்பவ இடத்திக்கு வருகை தந்து, குப்பைகளை உடனே அகற்றி விடுகின்றோம் என்று வாக்குறுதி தந்து போரட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததின் பேரில் போரட்டாம் கைவிடப்பட்டது. துரிதமாக செயல்பட்டு குப்பைகள், கழிவுகளை அகற்ற உறுதுணையாக இருந்த மஜக வழுத்தூர் கிளை நிர்வாகிகள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம். 16/3/2017
ஐந்து அம்ச கொள்கைகளை பிரதிபலிக்கும் பட்ஜெட்…
(2017-2018)-ம் ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA வெளியிடும் அறிக்கை) 2017-2018-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எளியவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. கடந்த நிதி நிலை அறிக்கையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட நீர் ஆதார மேலாண்மை, வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கான வீட்டுவசதி, திறன் மேம்பாடு, தூய்மை தமிழ்நாடு, ஆகிய ஐந்து அம்ச திட்டக் கொள்கைகைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் பின்பற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. • வறுமை ஒழிப்பிற்காக 741.12 கோடி ஒதுக்கீடு. • தமிழ் வளர்ச்சித்துறைக்காக 48 கோடி ஒதுக்கீடு. • மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடி ஒதுக்கீடு. • நாகப்பட்டினம் உள்ளிட்ட மீன் பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்த 1105 கோடிக்கு ஒப்புதல். • அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டத்திற்காக 250 கோடி ஒதுக்கீடு. • நீர்வள ஆதாரத்துறைக்கு 4791 கோடி ஒதுக்கீடு. • பள்ளிக் கல்விக்காக 26,932 கோடியும், உயர்க் கல்விக்காக 3,680 கோடியும் ஒதுக்கீடு. • இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக 116 கோடி ஒதுக்கீடு. • மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 466 கோடி ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் பாராட்டப்படக்கூடியதாகும். அதே சமயம், சிறுபான்மை மக்களுக்காக குறிப்பிட்டு
மாணவர் இந்தியா கோரிக்கை ஏற்று சாலை அமைப்பு…
சென்னை.மார்ச்.16., வடசென்னை புளியந்தோப்பு இராமசாமி தெருவில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையால் மக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வந்தனர். மக்களின் இன்னல்களை அறிந்து அப்பகுதியில் வசித்து வரும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தீன் "அம்மா புகார் மையம்" தொலைபேசி எண்: 1100 தொடர்பு கொண்டு சாலை இல்லாமல் மக்கள் படும் இன்னல்களை விவரித்து புகாரை பதிவு செய்தார். புகார் எண் : 17011000643 மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு சாலையின் விவரங்களை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள் புதிய சாலை அமைத்து மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு புகார் எண் : 17011000643 மீது நடவடிக்கை எடுத்து சாலை அமைத்துவிட்ட தகவலை பதிவு செய்தனர். புகார் பதிவு செய்து ஒரு வார காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா சார்பாக தீன் நன்றியை தெரிவித்தார். தகவல் : ஊடகபிரிவு. மாணவர் இந்தியா, வடசென்னை மாவட்டம். 16.03.2017 #Maanavar_India