​திவிக தோழர் படுகொலை மஜக கடும் கண்டனம் …

( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA விடும் அறிக்கை ) 

திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த தோழர் பாரூக் என்பவர் படுகொலை செய்யப்பட்டதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது . 
யாருடைய கருத்தையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்வதே நேர்மையான அணுகுமுறையாகும் . மாறாக வன்முறையை கையில் எடுப்பது  ஜனநாயக விரோத செயலாகும் . அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , தி வி க தோழர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் . 
இவ்விசயத்தில் உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் . 
இவண்
M.தமிமுன் அன்சாரி MLA 

பொதுச் செயலாளர் 

மனிதநேய ஜனநாயக கட்சி 

18-03-2017