ஆதரவற்றவர்களுக்கு உணவளித்த மஜக-வினர்

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நிலையில் சாலையோரம் உள்ளவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலந்தூர் பகுதி சார்பாக இன்று மதியம் பிரியாணி உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

ஆலந்தூர் சலீம் தலைமையில், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் AJ.சாதிக், பகுதி செயலாளர் T.கபீர் முகம்மது, பொருளாளர் S.பஷீர் ஆகியோர் உணவு பொட்டலங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.