​வழுத்தூரில் மஜகவின் முயர்ச்சியால் குப்பைக் கழிவுகள் அகற்றம்…

கும்பகோணம்.மார்ச்.16., வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) ஆரம்பப்பள்ளி அருகில் நீண்ட நாள் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இதனை அறிந்த மஜகவின் மாவட்ட செயலாளர் வழுத்தூர் P.முஹம்மது சேக் தாவூத் அவர்கள்  குப்பைகள் எடுக்க விட்டால், வழுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அனைத்து குப்பைகளையும் கொட்டி போரட்டாம் நடத்தப்படும் என்று  மஜக வழுத்தூர் கிளை சார்பில் அறிவித்தார்கள்.
அறிவித்த ஒரு சில நிமிடத்தில் வழுத்தூர் ஊராட்சி CLERK அறிவழகன் அவர்கள் சம்பவ இடத்திக்கு வருகை தந்து,  குப்பைகளை உடனே அகற்றி விடுகின்றோம் என்று வாக்குறுதி தந்து  போரட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததின் பேரில் போரட்டாம் கைவிடப்பட்டது.
துரிதமாக செயல்பட்டு குப்பைகள், கழிவுகளை அகற்ற உறுதுணையாக இருந்த மஜக வழுத்தூர் கிளை  நிர்வாகிகள்.
தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி,

மனிதநேய ஜனநாயக கட்சி,

#MJK_IT_WING

தஞ்சை வடக்கு மாவட்டம்.

16/3/2017