குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 14/04/2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முர்காப் ராஜ்தானி உணவகத்தில் நடைபெறுகிறது. மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி MJK-IT-WING குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 - 65510446 E-mail: mjkkuwait@gmail.com Web : www.mjkparty.com
செய்திகள்
வேலூர் (மே) மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் கடாம்பூரில் மஜக கிளை உதயம்…
வேலூர்.மார்ச்.20., வேலூர் மேற்கு மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சி கடாம்பூரில் புதிய கிளை உதயம் . பேர்ணாம்பட்டு ஒன்றியம் கடாம்பூரில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் J.M.வசீம் அக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சையத் ஜாவித், S.M.D நவாஸ் மற்றும் பேர்ணாம்பட்டு நகர செயலாளர் K.ரசீத் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடாம்பூர் கதீர் அஹ்மத், சதீஸ், நசீர் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர் இதில் கைலாசகரி ஊராட்சியை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். பின்பு அனைவரயும் மஜகவின் பணிகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் உரை நிகழ்த்தினர். அதன்பின் அனைவரும் ஆர்வமாக தங்களை மஜகவில் இணைந்துக்கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 19.03.2017
நாகை தொகுதிக்கு 6 பாலங்கள் ..!
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக அரசு 6 புதிய பாலங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது . 2016-ல் புதிய ஆட்சி அமைந்து 10 மாதத்திற்குள் நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியத்திற்கு கீழ்க்கண்ட 6 இணைப்பு பாலங்கள் கிடைத்ததில் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . இதற்காக அதிமுக அரசுக்கும் , நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் , மாவட்ட அமைச்சர் O.S. மணியன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றனர் . பாலங்கள் பற்றிய விபரம் . 1. முடிகொண்டான் ஆற்றில் கீழசன்னநல்லூர் - காவாளி இணைப்பு பாலம் . 2.வடபாத்தில் கரம்பை - கூறக்களகுடி இணைப்பு பாலம் . 3.புத்தாற்றில் புறாகிராமம்-நாட்டார்மங்களம் இணைப்பு பாலம் . 4.நரமேனி ஆற்றில் சடகோபன்மூளை- கீறங்குடி இணைப்பு பாலம் . 5. ஆழியாற்றில் தென்னமரக்குடி- தாதன்கட்டளை இணைப்பு பாலம் . 6.ஆழியாற்றில் திருநாட்டாந்தோப்பு- திருமாளையம் பொய்கை இணைப்பு பாலம் . தகவல் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 19-03-2017
வேலூர் (மே) குடியாத்தம் ஒன்றியம் காயிதேமில்லத் நகரில் மஜக உறுப்பினர் சேர்க்கை…
வேலூர், மார்ச்.20., நேற்று வேலூர் மே மாவட்ட குடியாத்தம் ஒன்றிய காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த முகாமினை மாவட்ட து செயலாளர் S.M.D.நவாஸ் தொடங்கி வைத்தார்., உடன் மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப் மற்றும் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாமுதீன், நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹ்மத், நகர துணை செயலாளர் N.சலீம், ஒன்றிய பொருளாளர் W.அமீன், ஒன்றிய து.செயலாளர் அம்ஜத் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஏராளமானோர் ஆர்வமாக தங்கள் மஜக உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 20.03.2017
முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி! நாகை MLA பங்கேற்பு!
நாகை. மார்ச்.18.,நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தமிழக கைத்தறி துணிநூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த 178 பெண்களுக்கு ரூ.86 லட்சத்து 63 ஆயிரத்து 936 மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 18.03.2017