(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களின் சமூக இணையதள பதிவு) பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்கள் , பிரதமர் மோடியின் மனசாட்சி ஆவார் . மோடியின் எண்ண ஓட்டங்கள் பிரதிபலிப்பவர். இப்போதைய அவரது காந்தி குறித்த கருத்து நாட்டையே உலுக்கியிருக்கிறது . நேதாஜி, அம்பேத்கார் , பகத்சிங் ஆகியோரின் விவகாரங்களில் காந்தியின் மீது நமக்கும் பல அரசியல் விமர்சனங்கள் உண்டு . ஆயினும் அவர் அனைவருக்குமான ஒரு தலைவர் என்பதிலும் அகிம்சை எனும் புதிய கொள்கை மூலம் இந்தியாவுக்கான புதிய அடையாளத்தை உருவாக்கியவர் என்பதிலும் ஐயமில்லை. இந்திய விடுதலைக்கு அவரது தலைமை தான் இறுதி வடிவத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் நல்லிணக்கமிக்க ஒரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி அதில் உறுதியாக செயல்பட்டார். அதனாலேயே RSS அமைப்பின் ஆதரவாளரான கோட்சே அவரை கொலை செய்தான். காந்தியாரின் மீதான காழ்ப்புணர்ச்சி, கோட்சேயின் கொள்கை வழி பேரப்பிள்ளைகளிடம் இது மிக அதிகமாக இருக்கிறது. அந்த காவிக்கோபத்தில்தான் மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் எச்சூரியை தாக்கினார்கள் . அதன் இன்னொரு வடிவமாக பா ஜ க தலைவர் அமித்ஷா அவர்கள் காந்தியை ஒரு வியாபாரி என்று
செய்திகள்
அஜ்மானில் செயற்குழுகூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி…
யூஎயி.ஜூன்.12., ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மான் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் செயற்குழு கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிகிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டல செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பித்ரா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்டவைகள் விவாதிப்பட்டன. கூட்டத்தில் மண்டல பொருளாளராக சகோதரர் கடியாச்சேரி S.அப்துல் மாலிக் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள். அஜ்மான் மண்டல பொருப்பாளராக அமீரக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் நியமிக்கப்பட்டார். மண்டல செயலாளர் செல்லப்பா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. பின்னர் மண்டலத்தின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரக துணை செயலாளர் M.அபுல் ஹசன், மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MJK_IT_WING
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம்.
குவைத்.ஜூன்.12., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிக்கிழமை இஃப்தாருக்கு பின் சல்வாவில் மண்டல செயலாளர் சகோ.முத்துகாபப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமமையில் நடைபெற்றது. இதில் இவ்வருட ரமலான் மாதத்தின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி. குவைத் மண்டலம். #MJK_IT_WING 55278478 - 60338005 - 65510446.
நாகை தொகுதியில் சிறப்புடன் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் MLA அலுவலகத்தின் சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. EGS பிள்ளை கல்லூரியின் வளாகத்தில் பிரம்மாண்டமான கலையரங்கம் ஆண்கள், பெண்கள் என நிரம்பி வழிந்தது. கொடிகள், தோரணங்கள், விளம்பர பதாகைகள், ஆள் உயர தட்டிகள் எதுவுமின்றி அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துக் கொண்ட நிகழ்வாக இருந்தது. கோயில் குருக்கள், பாதிரியார்கள், ஜமாத்தார்கள், உலமாக்கள் என பல தரப்பினரும் ஒற்றுமையாக அமர்ந்து உரையாடி மகிழ்ந்தனர். மாவட்ட அமைச்சர் மாண்புமிகு O.S.மணியன், மாவட்ட ஆட்சியர் S.சுரேஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் ஆகியோர் வந்திருந்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. காரணம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஒன்றாக பொது நிகழ்ச்சியில் அமர்வதில்லை. ஆனால் இந்த இஃப்தார் தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமைந்துவிட்டது. மேலும், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், பூம்புகார் MLA பவுன்ராஜ், சீர்காழி MLA பாரதி, மயிலாடுதுறை MLA ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வருகை தந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் அவர்கள் வருகை தந்து தனது தோழமையை வெளிப்படுத்தினார். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் ஒருவர் விடாமல் கலந்துக் கொண்டது நிகழ்ச்சியின்
மஜகவின் கடலூர் (தெ) மாவட்ட செயல்வீரர் கூட்டம்…
கடலூர்.ஜூன்.11., கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் 10-06-2017 நேற்று இரவு நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில செயலாளர் தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கிளை நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள் பங்கெடுத்தனர். தகவல் தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் (தெ) மாவட்டம் 10-06-2017