நாகை. நவ.04., நாகையில் கடந்த 30ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகை 11வது வார்டு சாய்பாபா கோயிலின் அருகே சுனாமி குடியிருப்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. தொடர்ந்து மழையின் காரணமாக சுனாமி குடியிருப்பு மழை வெள்ளத்தால் சூழ்ந்தது. இன்று (04/11/2017) மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே MLA அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக செயலாளர் சம்பத்குமார், நாகை நகர மஜக செயலாளர் M.சாகுல் ஹமீது, மருத்துவ சேவை அணி நகர செயலாளர் H.செய்யது முபாரக், தொழிற்சங்க அணி நகர துணை செயலாளர் M.அப்துல் காதர், மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் H.அனாஃப் மற்றும் அதிமுகவை சார்ந்த விஜயக்குமார், சக்கரவர்த்தி ஆகியோர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு விறைந்தனர். உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பேரிடர் மீட்புப்பணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பேரிடர் குழு சார்ந்த நாகூர் VAO வினோத் குமார் சம்பவ இடத்திற்கு, JCB உடன் வந்து, மழை-வெள்ளம் சார்ந்த இடங்களை
செய்திகள்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் மஜக பங்கேற்பு!
சென்னை.நவ.04., சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் P.R.பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நடிகர் கமல்ஹாசன், பேராசிரியர். டாக்டர். S. ஜனகராஜன் ஆகியோர் விவசாயிகளை சந்திக்ககூடிய பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினர். இதில் மஜக சார்பாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மாநில துணை செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 04.11.2017
பஹ்ரைனில் எழுச்சியோடு நடைபெற்ற சமூகநீதி மாநாடு!
பஹ்ரைன்.நவ.04., பஹ்ரைனில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)வின் வெளிநாட்டு பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP)யின் சார்பில் சமூகநீதி மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. தந்தைப்பெரியார் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு, அதில் நடைபெற்ற மாநாட்டில் SDPI, திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அகதிகளாக புறப்பட்டு கடலில் உயிர்துறந்த ரோஹிங்ய மக்களுக்காக 1 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று ஆறுதல் மவுனம் செலுத்தினர். பொதுச்செயலாளருக்கு பஹ்ரைன் வாழ் தமிழ் உணர்வாளர்களும், திராவிட இயக்கவாதிகளும் பொன்னாடை போர்த்தினர். நிகழ்வின் இறுதியாக பொதுமக்களின் கேள்விகளுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் சிறப்பாக பதிலளித்தார்கள். இது ஒரு அரசியல் வகுப்பு போல அமைந்தது. இதை பலரும் பாராட்டி வரவேற்றனர். இலக்கியம், பொழுதுபோக்கு அல்லாது பஹ்ரைனில் அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டங்களில் இதுதான் பெரிது என அனைவரும் ஒன்றுபட கூறினர். வளைகுடா நாடுகளில் மிகவும் சிறிய நாடான பஹ்ரைனில் தமிழர்கள் நிறைவாகவே உள்ளனர். இந் நிலையில் அரங்கம் நிறைந்து கூடுதல் நாற்காலிகளும் போடப்பட்டு வெளியிலும் கூட்டம் நின்றிருந்தது. ஆண்கள், பெண்கள் என 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதும்,
கந்து வட்டி கொடுமையால் மற்றொரு மரணம்..! SPயை சந்தித்தார் மஜக பொருளாளர்..!!
திண்டுக்கல்.நவ.04., திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ரபீக் அவர்களின் மனைவி தில்ஷாத் பேகம் என்பவர் மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்நிலையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பல நபர்களிடமிருந்து கடன் வாங்கி கொடுத்துள்ளார். கொடுக்கல் வாங்கல் அதிகரித்த நிலையில் கடன் வாங்கிய நபர்களிடமிருந்து வட்டியின் காரணமாக நெருக்கடி அதிகரித்திருக்கிறது. மன உளைச்சல் காரணமாக நேற்று 02/11/2017 காலை 11மணியளவில் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தற்கொலை செய்ய காரணமாக இருந்தவர்ளை கைது செய்தால்தான் தில்ஷாத் பேகத்தின் உடலை வாங்குவோம் என்று உறவினர்களும், பொது மக்களும் தர்ணாவில் ஈடுப்பட்டுனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். பிரச்சனையை திசை திருப்ப சில காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதை மாநில பெருளாளர் அவர்களிடம் தெரியப்படுத்தபட்டது இந்த விஷயம் பொதுமக்களிடையே பரவ மருத்துவமனையில் பதற்றம் அதிகமானது. இந்நிலையில்
மழை வெள்ள நிவாரணப் பணியில் மஜக..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…!!
சென்னை.நவ.04., சென்னை புளியந்தோப்பு பகுதயில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். தெருக்களில் ஆறுகள் போல் தண்ணீர் ஓடுகிறது. மின்சாரமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் உணவின்றி மக்கள் தவிகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. அத்துடன் பிரட், பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின்மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது மேற்பார்வையில், மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், வடசென்னை முன்னால் மாவட்டத் துணைச் செயலாளர் அன்வர், வட்டச் செயலாளர் ஹனீப் உட்பட நிர்வாகிகள் நிவாரணப்பணியில் ஈடுபட்டனர். உணவுகளை வீடு வீடாக சென்று வழங்கினர். மஜகவின் மனிதநேய பணிகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். ஏற்கனவே பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்த பகுதியிலுள்ள குறைபாடுகளை நேரில் ஆய்வு செய்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வட_சென்னை_மாவட்டம்.