சென்னை.நவ.04., சென்னை புளியந்தோப்பு பகுதயில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். தெருக்களில் ஆறுகள் போல் தண்ணீர் ஓடுகிறது.
மின்சாரமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் உணவின்றி மக்கள் தவிகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. அத்துடன் பிரட், பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சியின்மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது மேற்பார்வையில்,
மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்றன.
அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், வடசென்னை முன்னால் மாவட்டத் துணைச் செயலாளர் அன்வர், வட்டச் செயலாளர் ஹனீப் உட்பட நிர்வாகிகள் நிவாரணப்பணியில் ஈடுபட்டனர்.
உணவுகளை வீடு வீடாக சென்று வழங்கினர். மஜகவின் மனிதநேய பணிகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஏற்கனவே பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்த பகுதியிலுள்ள குறைபாடுகளை நேரில் ஆய்வு செய்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வட_சென்னை_மாவட்டம்.