கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் சங்கரன்கோவிலில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது!!


தென்காசி.ஏப்.24.,

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சுல்தான், நகரப் பொருளாளர் இத்ரீஸ், நகர இளைஞர் அணி செயலாளர் தர்வீஸ் மைதீன், நகர வர்த்தக அணி செயலாளர் ராஜா முஹம்மது, நகர நிர்வாகிகள் மற்றும் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் அ.பீர் மைதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
#24.04.2020