கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் வழியனுப்பிவைப்பு!!

அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மஜகநிர்வாகிகள் பங்கேற்பு!!

கோவை:ஏப்.24.,

கோவையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்கள்.

அதை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைலிருந்து இன்று 38நபர்கள் டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை அமைச்சர் S.P.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, இஎஸ்ஐ மருத்துவ மனை முதல்வர் டாக்டர், நிர்மலா, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர், காளிதாஸ், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், ஆகியோர் பழக்கூடைகள் வழங்கி கரவொலிகள் எழுப்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன்,சுவனம் அபு.

மற்றும் தமுமுக, மமக, ஜாக், முஸ்லிம்லீக், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
24.04.2020