(தொகுப்பு 3) நாகை தொகுதிக்குட்பட்ட நாகை நகரம், நாகை ஒன்றியம் ஆகியவற்றில் மழைப் பாதிப்புகள் குறித்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், திருமருகல் ஒன்றியத்திற்கும் வருகை தந்து மக்களை சந்தித்தார். வாஞ்சூர் பகுதிக்கு வந்தவர் அங்குள்ள மீன் மார்க்கெட் பகுதியில் மீனவர்களையும், பொது மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டார். அங்குள்ள மீன் மார்க்கெட் கூரை இடியும் நிலையில் இருப்பதால், அதை இடிந்து விட்டு மீன் மார்க்கெட்டை புதுப்பிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். பிறகு, பனங்குடி ஊராட்சியில் பெரியார் சமத்துவபுரத்திற்கு வருகை தந்து, பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கடந்த 20 ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு குறை கேட்க வந்த முதல் MLA நீங்கள்தான் என அப்பகுதி மக்கள் வரவேற்றனர். பிறகு, மீனவர் காலனி, சுனாமி குடியிறுப்பு பகுதிகளை பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும், குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு, முட்டம் பனங்குடி, உத்தம சோழபுரம், குத்தாலம், கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களுக்கும் வருகை தந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் கொடுத்த மனுக்களை குறித்துக்
செய்திகள்
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்…!
கோவை.நவ.09., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (08.11.17) மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர் சங்க செயலாளர் அக்பர், சூற்றுச்சூழல் அணி செயலாளர் முஹம்மது சலீம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, வழக்கறிஞர் அணி செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. வருகின்ற டிசம்பர் 6 இரயில்நிலைய முற்றுகை போராட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 2.வருகின்ற 12.11.17.அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 08.11.17
காயல்பட்டினம் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மஜகவினர் மனு..!
தூத்துக்குடி.நவ.09 ., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 09-11-2017 காயல்பட்டினத்தில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் சாலைகள் சீரமைப்பு, தெரு விளக்குகள் சரி செய்தல், நகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குடி நீர் தொட்டிகளை சுத்தம் செய்து குடி நீர் நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் நகர மஜக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில், நகர துனை செயலாளர் ஜீயாவுதீன், மஜக உறுப்பினர் ஷல்சபில் ஆகியோர் உடன் இருந்தனர். #தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம். 09-11-2017
பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்தவர்..! ஐயா.நன்னன் மறைவுக்கு மஜக இரங்கல்..!!
(#மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தனித்தமிழன் இயக்கத்தின் ஒப்பற்ற பரப்புரையாளராகவும், தமிழ் மொழி வல்லுநரகவும் வாழ்நாள் முழுக்க உழைத்த தமிழ் பேரரிஞர் ஐயா. நன்னன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுள்ளகிற்கு ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. இதழ்கள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்த திராவிட இயக்க புதல்வரை இழந்திருக்கிறோம். தனது பணிகள் மூலம் நிகழ்கால தமிழாசிரியர்களுக்கு இவரே முன்னோடியாக திகழ்ந்தார். அவர் நவீன தமிழ் இலக்கணத்தின் தந்தையாகவும் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்ததுடன் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அடுத்த தலைமுறைக்கும் தனது பணிகளை விரிவுபடுத்தி சென்றிருக்கிறார். தவறின்றி தமிழ் எழுதுவோம், திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் நூல்களின் உரை விளக்கங்கள், பெரியார் கணினி ஆகிய படைப்புகள் அவரது பெருமையை பேசும். அவரது செம்மொழி தமிழ் வளர்த்த பணியை நிகழ்கால தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினற்கும், திராவிட இயக்க மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்டோரின் துயரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியும் உளப்பூர்வமாக பங்கேற்கிறது... இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 09.11.17
தோழர்.சீமான் இல்லத்தில் மஜக மாநில நிர்வாகிகள்…
காஞ்சி.நவ.09., மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரசீத் M.com அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் தோழர்.சீமான் அவர்களை நேற்று (08.11.17) அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர்பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் N.அன்வர் பாஷா, துறைமுகம் பகுதி செயலாளர் சீனி முஹம்மது, துறைமுகம் பகுதி நிர்வாகிகள் அஸ்கர்அலி மற்றும் அம்ஸத் ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_மாவட்டம்.