காயல்பட்டினம் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மஜகவினர் மனு..!

image

image

image

தூத்துக்குடி.நவ.09 ., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 09-11-2017 காயல்பட்டினத்தில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் சாலைகள் சீரமைப்பு, தெரு விளக்குகள் சரி செய்தல், நகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குடி நீர் தொட்டிகளை சுத்தம் செய்து குடி நீர் நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் நகர மஜக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில், நகர துனை செயலாளர் ஜீயாவுதீன், மஜக உறுப்பினர் ஷல்சபில் ஆகியோர் உடன் இருந்தனர்.

#தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்.
09-11-2017