விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலை செங்கத்தில் மஜகவினர் பச்சை முண்டாசு கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!


செங்கம்.அக்டோபர்.02.,

விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மாவட்டச் செயலாளர் காஜாஷரிப் தலைமையில் திரளானோர் பச்சை முண்டாசு கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர்கள், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவண்ணாமலை_மாவட்டம்
02.10.2020