கறம்பக்குடியில் சோளத்தை கையில் ஏந்தி மஜகவினர் நூதனப் போராட்டம்.!


அக்.02,
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் கறம்பக்குடியில் பச்சை துண்டு அணிந்து சோளத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் துரைமுஹம்மது பங்கேற்க மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ( ML ) மாவட்ட செயலாளர் விஜயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட பொருளாளர் ரஹீம்தாலிஃப், துணைச் செயலாளர் லெட்சுமணன், இளைஞரணி செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பல்வேறு கட்ட மஜக நிர்வாகிகள் திரளாக பங்கேற்க நகர செயலாளர் ஆசை அப்துல்லா நன்றி கூறினார்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #கறம்பக்குடி_பேரூர்
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்.