திருநெல்வேலியில் முக்கிய சாலை மூடல்.! பேட்டையில் மஜகவினர் ஒருங்கிணைப்பில் மக்கள் திரண்டதால் பரபரப்பு…!


நெல்லை.அக்.02

கடந்த 50 வருடங்களாக மக்கள் பயண்படுத்திய வந்த பேட்டை ஆசிரியர்காலனி, திருவள்ளுவர் நகர், அண்ணாநகர், திருமங்கை நகர் வழியாக செல்லும் செந்தமிழ் நகர், திருப்பணி கரிசல்குளம் செல்லும் பிரதான சாலையை அரசு ஐடிஐ நிறுவனம் அடைத்தை தொடர்ந்து.

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் பேட்டை நகரத்தின் ஒருங்கிணைப்பில் பொதுமக்களை ஒன்றுதிரட்டி இன்று (02-10-2020) அடையாள போராட்டம் நடத்தினர்.

போராட்ட இடத்திற்கு பேட்டை காவல் ஆய்வாளர் வேல்கனி அவர்கள் மஜகவினரிடம் பேச்சுவார்தை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வை ஏற்படுத்தி தருவதாக கூறியதன் அடிப்படையில் மக்கள் கலைந்துசென்றனர். ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்பட்டு மூடிய சாலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை என்றால் மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் மஜக-வின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், பொருளாளர் பேட்டை மூஸா, பேட்டை நகர செயலாளர் இரா.முத்துகுமார், பொருளாளர் அசன்கனி, பேட்டை நகர அணி நிர்வாகிகள் ஹபிபுல்லாஹ், முருகேசன் மற்றும் பேட்டை மக்கள் நல அமைப்பு ராஜகனி, மதிமுக நெல்லை மாவட்ட துணை செயளாலர் செல்லமுத்து, ஜமாத்தை சார்ந்த சதக் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
02-10-2020