விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரையாற்றினார்!!


செப்.02.,

விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை மாவட்டம் தமுக்கம் தந்தி அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச்சட்டங்கள் குறித்தும் அது விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உரையாற்றினார்.

இதில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒத்தக்கடை பாருக், புதூர் கனி, மாவட்ட துணை செயலாளர்கள் கோடை அப்துல் மஜீத், பென்ஸ் மோகன், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் , நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_மாவட்டம்
01.10.2020