திண்டுக்கல்.ஜன.08., கடந்த 05.01.2018 அன்று திண்டுக்கல் வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா, பொறுப்பு குழு உறுப்பினர்கள் A.அப்துல் காதர் ஜெய்லானி, S.சரவணன், R.உமர் அலி, M.அனஸ் முஸ்தபா மற்றும் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வடமதுரை பிலாத்து, திண்டுக்கல் 16வது வார்டு ரவுண்ரோடு கிளை நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம். 06.01.2018
செய்திகள்
திருச்சியில் திரளானோர் மஜகவில் இணைந்தனர்..!
திருச்சி.ஜன.08.,திருச்சியில் நேற்று(07.01.2018) பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி, சீனி முகம்மது,ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர். மாவட்ட நிர்வாகிகளான திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஷேக்தாவூத், இளைஞர் அணி சதாம் ஆகியோர் உடனிருந்தனர். இதில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருச்சி_மாவட்டம். 07.01.2018.
கவர்னர் உரையை புறக்கணித்து… மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளிநடப்பு!
சென்னை. ஜன.08., இன்று தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையாற்ற தொடங்கியபோது, எதிர்கட்சிகள் எழுந்து வெளிநடப்பு செய்தனர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளிநடப்பு செய்து பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது... மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக, மரபுகளை மீறி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் கவர்னரின் உரையை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். மேலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாக்குமரி மாவட்டத்தை "தேசிய பேரிடர் பாதிப்பு" மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். அதுபோல் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 159 படகுகளையும், மீனவர்களையும் இலங்கை அரசு சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. அதை மத்திய அரசு மீட்டுத் தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம். இவ்விரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு புறக்கணித்து வரும் நிலையில், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் தமிழக கவர்னரின் உரையை மூன்று காரணங்களின் அடிப்படையில் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்! இவ்வாறு அவர் பேட்டியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #சென்னை. 08.01.18
திருச்சியில் மஜக நிர்வாக குழு மற்றும் சிறப்பு நிர்வாககுழு கூட்டம்..!
திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர்கள் JS.ரிஃபாயி ரஷாதி, AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் கோவை பசீர், Er.சைபுல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, பல்லாவரம் சபி, ஈரோடு பாபு ஷாஹின்ஷா, புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர். மேலும் அணி நிர்வாகிகளான விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியமான பல கருத்துக்களை கொண்டு கட்சியின் வளர்ச்சினை பற்றி நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 07.01.18
IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தம்மாம்.ஜன.07., இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP தமாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (05.01.2018) வெள்ளிக்கிழமை அன்று தம்மாமில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. மண்டல மூத்த நிர்வாகி ஹாஜராஜ் முகைதின் அவர்கள் தலைமையில், செய்யது ஹமீது அவர்கள் முன்னிலையிலும் வகித்தார்கள். மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் மண்டல செயல்பாடுகள் குறித்தும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், அதற்கு தமிழகத்தில் கேரளாவை போன்று தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் அப்படி அமைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பேசினார்கள். அடுத்து பேசிய மண்டல பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் மண்டல களப்பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், விளக்கமாக பேசினார்கள். அதை தொடந்து கிளை நிர்வாகிகள் கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் மண்டல செயலாளர் விடுமுறையில் தாயகம் செல்வதால் இந்த கூட்டத்தில் மண்டல துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் தற்காலிக மண்டல பொருப்பாளராக தேர்வு செய்தார்கள். உதவி பொறுப்பாளர்களாக அஜீஸ் பாய் அவர்களும் முகம்மது இலியாஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டார்கள். தீர்மானம். தமிழக சட்டப்பேரவையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க