நாகை தொகுதியிலிருந்து "நீட்" தேர்வு எழுத செல்பவர்களுக்கு முழு தொகையும் "ஸ்பான்சர்கள்" வழங்கப்படும் என #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அறிவித்தார். இதில் 5 பேர் உதவிகளை பெற்றுக் கொண்டு தேர்வு எழுத சென்றனர். கேரளாவிலிருந்து முதலில் திரும்பியுள்ள மாணவி பிரியதர்ஷினி, நாகை வந்து இறங்கியுள்ளார் தமிமுன் அன்சாரி MLA அவர்களை, தனது அப்பா வெங்கட் மற்றும் தம்பியுடன் வந்து நெகிழ்ச்சியுடன் "நன்றி" அண்ணே…… என்று கூறினார். "நீட்" தேர்வில் பெற்றிப்பெற MLA அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும்! வெல்லட்டும் வெல்லட்டும்! சமூக நீதி வெல்லட்டும் தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம், 09/05/2018.
செய்திகள்
மதுரையில் மஜகவின் மேலும் ஓர் தண்ணீர் பந்தல் திறப்பு..! துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு…!
மதுரை.மே.08., மதுரை வடக்கு மாவட்டத்தில் #மனிதநேய _ஜனநாயக_கட்சி கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கிய #தண்ணீர் பந்தலுக்கு கிடைத்த பொதுமக்களின் ஆதரவும் வரவேற்பையும் தொடர்ந்து. மேலும் மாவட்டத்திற்குட்பட்ட பல இடங்களில் இந்த நிகழ்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படையில் இன்று காலை ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் #மன்னை_செல்லச்சாமி அவர்கள் #நீர்மோர்_பந்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்., இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஒத்தக்கடை கிளைச்செயலாளர் கனி, துணைச்செயலாளர் முகம்மது, துணைச் செயலாளர் ராஜா, மீனவர் அணி ஷாஜகான், பீர் முகம்மது, ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தெற்கு மாவட்ட செயலாலர் மொய்தீன். வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர்கள் சசிக்குமார், சிக்கந்தர், ஒன்றிய செயலாளர் சுலைமான், தொழிலாளர் அணிச்செயலாளர் அப்பாஸ், மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவிராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தகவல் #மஜக _தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம் 08-05-18
ஜாக்டோ – ஜியோ போராட்டகாரர்கள் கோரிக்கைகளின் மீது தமிழக அரசு கவனம் எடுக்க வேண்டும்..! மஜக கோரிக்கை…!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி #ஜாக்டோ_ஜியோ அமைப்பை சேர்ந்த #அரசு_ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருவது தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை பேசி தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும் சுமுகமான முறையில் இப்பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அரசு ஊழியர்களின் முற்றுகை போராட்டத்தை ஒடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைத்து அரசு ஊழியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 08/05/2018.
அபுதாபி மண்டல MKP செயற்குழு கூட்டம்..!
அமீரகம்.மே.07., கடந்த வெள்ளிக்கிழமை (04-05-2018) அன்று அபுதாபி மண்டல மஜகவின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி. S.A.முஹம்மது தையூப் தலைமையில் மாலை 6 அளவில் நடைபெற்றது. இதில் அபுதாபி மண்டல நிர்வாகிகள் மற்றும் பனியாஸ், அபுதாபி சிட்டி, முஸாப்பாஹ் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். சிறப்பாக நடைப்பெற்ற இச்செயற்க்குழு கூட்டத்தில் கீழ் காணும் விசயங்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 1. புனித ரமலான் மாதத்தில் அமீரகம் வருகை தரும் மஜக பொதுச்செயலாளரம் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, அபுதாபியில் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சி நடத்துவது. 2. மண்டல செயலாளர் ஹாஜி. S.A. முஹம்மது தையூப் தலைமையில் அடியற்கை. தமீமுன் அன்சாரி, கொல்லாபுரம் யாசிர், நரசிங்க பேட்டை பக்கீர் முஹம்மது, லால்பேட்டை பதஹூல்லாஹ் உள்ளிட்டோர் அடங்கிய இப்தார் குழு அமைப்பது. 3. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி பொதுச்செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைப்பது. 4. ஒவ்வொரு மாதமும் கிளை வாரியாக கூட்டங்கள் நடத்துவது. 5. இப்தார் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தொண்டர் அணியை அமைப்பது. இறுதியில்
குடியாத்ததில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!
வேலூர்.மே.07., வேலூர் மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் குடியாத்தம், MBS நகரில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப் முன்னிலையில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் சலீம், கிளை செயலாளர் அல்தாப், கிளை துணை செயலாளர் சாதிக், கிளை மருத்துவ அணி செயலாளர் ரஹ்மான், மற்றும் பிலால், அல்த்து, ஆகியோர் கலந்து கொண்டனார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #குடியாத்தம்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 06.05.2018